ஜெயலலிதா உடல்நிலை குறித்து அப்போலோ அறிக்கை
மேலும் பல நாட்களுக்கு சிகிச்சை!



தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து 15-வது நாளாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அப்போலோ மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதல்வரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் உடன் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முதல்வரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படுகிறது. முதல்வர் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவர்களுடன், எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். இன்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். அவர் மேலும் பல நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். பல்வேறு துறைகளின் நிபுணர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

முக்கியமாக அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவக் குழுவில் உள்ள மருத்துவர்களின் பெயர்களையும் அப்போலோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்   தெரிவித்துள்ளது.

.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top