கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம்
இன்னும் இரு தினங்களில் தரம் உயர்த்தாவிடின்
                   பாரிய போராட்டமாம்!  
கல்முனை வருகின்றார் ஞானசார தேரர்



கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஞானசார தேரர் குரல் கொடுத்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இன்னும் இரு தினங்களில் தரம் உயர்த்தாவிடின் பாரிய போராட்டம் ஒன்றை கல்முனையில் மேற்கொள்ள இருப்பதாகவும் ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி கல்முனை விகாராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் தமிழ் இளைஞர்களும் இணைந்து இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கல்முனை விகாராதிபதி ரன் முத்துகல சங்கரத்தின தேரரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட போது பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள விகாராதிபதியின் உடல் நலம் பற்றியும் கேட்டறிந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது..

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top