சிங்கப்பூர் அமைச்சர்களை சந்தித்த ரணில்
புரிந்துணர்வை ஏற்படுத்துவது
 சம்மந்தமாகவும் கலந்துரையாடல்



சிங்கப்பூருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் காசி விஸ்வநாதன் ஆகியோரை சந்தித்துள்ளார்.

நேற்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

3 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் ரணில் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

இதன்போது, இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பல்வேறு விடயப்பரப்புகளில் ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்துவது சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சந்திரா தாசும் கலந்து கொண்டுள்ளார்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top