சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற
சொகுசு பஸ் விபத்திற்குள்ளாகியது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசு பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.

வவுனியா - ஈரப்பெரியகுளம், கல்குணாமடுப் பகுதியில் இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சொகுசு பஸ் வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது பயணி ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையின் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top