பௌத்த தேரர்களிடம் மண்டியிட்டு 
ஆசி பெறும் கோத்தா
மஹிந்தவும், வழிபாடுகளில் பங்கேற்பு

நடைபெறவிருக்கும்  ஜனாதிபதித் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக், தொடர் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 11ஆம் திகதி கொழும்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் களனி ரஜமகா விகாரையில் வழிபாடுகளை ஆரம்பித்த அவர், அடுத்த நாள் அனுராதபுரவுக்குச் சென்று பல்வேறு பௌத்த ஆலயங்களில் வழிபாடுகளை நடத்தினார்.

அதன் பின்னர், கண்டியில் உள்ள பௌத்த ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வருவதுடன், மகாநாயக்க தேரர்களையும், முக்கியமான பௌத்த விகாராதிபதிகளையும் சந்தித்து ஆசி பெற்று வருகிறார்.

பேராதனை கெட்டம்பே விகாரைக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக், அதன் விகாராதிபதியான கெட்டம்பே ரஜோபாவனராமாதிபதி வண. கெப்பிட்டியாகொட சிறிவிமல நாயக்க தேரரின் முன்னிலையில் மண்டியிட்டு, அவரது ஆசியையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டார்.

கோத்தாபய ராஜபக்வுடன் ஹிந்த ராஜபக்வும், இந்த வழிபாடுகளில் பங்கேற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top