Tuesday, February 3, 2015

கொழும்பு மருதானை ஜும்ஆப் பள்ளிவாசலில் சுதந்திர தின நிகழ்வுகள்


கொழும்பு மருதானை ஜும்ஆப் பள்ளிவாசலில்
சுதந்திர தின நிகழ்வுகள்

-.எஸ்.எம்.ஜாவித்

ஸ்ரீலங்காவின் 67வது சுதந்திர தின இஸ்லாமிய நிகழ்வுகள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு மருதானை ஜும்ஆ பள்ளிவாசலில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வுகளுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் திணைக்கள அமைச்சர் எம்.எச்..ஹலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். விசேட அதிதிகளாக அமைச்சின் செயலாளர் ஏ.அப்துல் மஜீத், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான .எச்.எம்.பௌசி, முத்தலிப்பாவா பாறுக், முஹமட் அஸ்லம், பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் எம்.எச்.தார்சைத் மற்றும் அரச உயர் அதிகாரிகள், உலமாக்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

மருதானை ஜும்ஆ பள்ளிவாசல் பிரதம இமாம் எம்..எம்.முர்ஸித் மற்றும் மௌலவி பைஸல் காரி ஆகியோர் நாட்டின் சமாதானத்திற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர்களுக்கு ஆசி வேண்டி விசேட (துஆ) பிரார்த்தனை நடாத்தினார்.





No comments:

Post a Comment