Friday, December 4, 2015

சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதி! ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கும் கமல்ஹாசன்!!

சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதி!
ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்கும் கமல்ஹாசன்!!

பல இளம் திரையுலக பிரபலங்கள் சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி இரவு, பகல் பார்க்காமல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், கமல் ஹாசன் ஒரு பேட்டியில் ''ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின்  இக் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
''உலக நாயகன் வெறுமனே வேடிக்கை மட்டும் பார்ப்பவராக இருந்தால் வெட்கப்பட வேண்டியதுதான்.''

''படம் வெளியாவதில் தடை ஏற்பட்டபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னவர், மக்கள் பாதிக்கப்பட்டதைக் கண்கூடாகப் பார்த்த பிறகும் வீட்டை விட்டே வெளியேறவே யோசிக்கிறாரே!'' என்று சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளித்துள்ளனர்.

No comments:

Post a Comment