Thursday, February 25, 2016

சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்


சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக

ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்


ஐனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
இன்று பிற்பகல் 01.30 மணியளவில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பிரதேச அபிவிருத்தி அமைச்சராக (அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்) இவர்  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அண்மையில் மரணமடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர், எம்.கே..டி.எஸ்.குணவர்த்தனவின் பாராளுமன்ற ஆசனத்திற்கு பொன்சேகா தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment