Friday, March 31, 2017

நுவரெலிய 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு இன்று ஆரம்பமாகிறது.


நுவரெலிய 2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு

இன்று ஆரம்பமாகிறது.


2017 வசந்தகால கொண்டாட்ட நிகழ்வு நுவரெலியாவில் இன்று ஆரம்பமாகிறது.  எதிர்வரும் 26ம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இதன்போது  இடம்பெறவுள்ளன.
 கோலாகாலமான முறையில் இந்த கொண்டாட்ட நிகழ்வை நடத்த தேவையான நடவடிக்கைகள் மேறகொள்ளப்பட்டுள்ளன.
  
பெரும் எண்ணிக்கையிலான  உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இம்முறை நுவரெலியா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 அவர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசல்களை குறைத்தல், கொலை, கொள்ளைகளை தடுத்தல், சுற்றாடல் மாசு அடைதலை தவிர்த்தல் போன்ற விடயங்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நுவரெலியாவில் ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கஅழைப்பு


முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட

அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கஅழைப்பு



முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ஹக்கீமுக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
அரச தொலைக்காட்சியில் நேற்று 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு  இடம்பெற்ற  வெளிச்சம் நேரடி நிகழ்ச்சியில்  அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த அழப்பினை விடுத்தார்.
ஒரு நேயர் தொலைபேசி மூலமாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போது தான் அமைச்சர் ஹக்கீமை பல தடவைகள் இணைந்து செயல்பட அழைப்பு விடுத்த போதும் அதற்கு பதில் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார்.
இதன் போது நிகழ்ச்சி தொகுப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை முஸ்லிம்களின் சமூக பிரச்சினைகளில் இணைந்து செயல்பட அமைச்சர் ரிஷாத் அமைச்சர் ஹக்கீமுக்கு பகிரங்கமாக இந்த அழைப்பை விடுத்தார்


மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான 3 மாடிக் கட்டிடம் இன்று அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான 3 மாடிக் கட்டிடம்

இன்று அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்தார்

மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரிக்கான 3 மாடிக் கட்டிடம் இன்று31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் .எல். இனாமுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழாவில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் . எல். நஸீர், மாகாண சபை உறுப்பினர்களான .எல்.எம். மாஹிர், .எல். தவம், ஆரிப் சம்சுதீன், சிப்லி பாருக், உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.








முஸ்லிம்களுக்கு வில்பத்து வன விஸ்தரிப்பு வர்த்தமானி மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது



முஸ்லிம்களுக்கு வில்பத்து வன விஸ்தரிப்பு

         வர்த்தமானி மூலம் அநீதி இழைக்கப்பட்டுள்ளது


நாம் வடக்கு முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள,அவர்கள்  போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பேருவளை பிரதேசத்தில் முஸ்லிம்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ,அவர்களிடம் வில்பத்து வனத்தை விஸ்தரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

நாம் இலங்கையில் 30 வருட காலமாக  நிலவிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவுடன்,அங்கு இன மத வேறு பாடுகளின்றி,நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு மீள் குடியேற்றங்களை மேற்கொண்டோம்.அந்த வகையில் நாட்டின் இறையான்மைக்கு குந்தகம் விளைவிக்காத யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களையும் மீள் குடியேற்றம் செய்தோம்.

என்னுடைய ஆட்சிக் காலத்தில் தற்போது போன்று பாரிய ஆர்பாட்டங்களை செய்து மீள் குடியேற்றுங்கள் என முஸ்லிம்கள் கேட்க வேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை.அன்று எம்மோடு இருந்த அமைச்சர் றிஷாதை முன்னிறுத்தி இந்த மீள் குடியேற்றங்களை செய்திருந்தோம்.விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதை எமது கடமையாகவும் கருதி இருந்தோம்.

என்னுடைய ஆட்சிக் காலத்திலும் பல இனவாத அமைப்புக்கள் என்னிடம் இது தொடர்பில் பல தடவைகள் சுட்டிக் காட்டி இருந்தன.பல ஆர்ப்பாட்டங்களையும் மேட்கொண்டிருந்தனர். அச் சந்தர்ப்பங்களில் அவர்களின் சொற்களை சிறிதும்  காதுக்கும் எடுக்காதிருந்தேன்.ஆட்சியை கைப்பற்றிய ஓரிரு வருடங்களுக்குள் இனவாத அமைப்புக்களுக்கு அஞ்சிய இவ்வரசு வில்பத்துவுக்கு வடக்கே உள்ள முஸ்லிம்களின் காணிகளை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வனமாக அறிவிக்கவுள்ளது.இந்த இனவாத அமைப்புக்களின் அழுத்தம் எத்தகையது? அவர்களுக்கு இவ்வரசு எவ்வாறு அடிபணிந்துள்ளது என்பதையெல்லாம் இதனூடாக முஸ்லிம்கள் அறிந்து கொள்வதோடு என்னுடைய காலத்தில் நிலவிய இனவாதத்தின் பின்னால் நான் இல்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.இதுவும் எனது செயலே என இவ்வரசின் ஆட்சியாளர்கள் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்வாறான செயல்களின் பின்னால் உள் நாட்டில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு சக்திகளின் அழுத்தம் இருப்பதாகவே கருத வேண்டி உள்ளது.இவற்றை எவருக்கும் அஞ்சாமல் முகம் கொடுக்கும் ஆற்றல் எம்மிடமே உள்ளது.


இவ் வர்த்தமானியானது அகதியாய் பல வருடங்களாக இன்னல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியாகும்.இந்த ஆட்சியின் முக்கிய பங்காளர்களான முஸ்லிம்களை இவ்வரசு அமைந்த சில வருடங்களுக்குள்ளே கை கழுவி விட்டது.நாம் முஸ்லிம்களுக்கு சாதாரணமாக பெற்றுக்கொடுத்தவற்றை தக்க வைத்துக்கொள்ள,அவர்கள்  போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.இதன் மூலம் முஸ்லிம்களின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் யார் என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளலாம்.

தாகத்தை தணிக்க வாட்டர் பாட்டிலில் தண்ணீரை குடித்த ராஜநாகம்


தாகத்தை தணிக்க வாட்டர் பாட்டிலில்

தண்ணீரை குடித்த ராஜநாகம்

தண்ணீர் பற்றாக்குறையால் பரிதவித்த ராஜ நாகத்திற்கு பாட்டிலில் தண்ணீர் கொடுத்த சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் தற்போது வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் தங்களது விளைபயிர்களை காக்கவும், மக்கள் குடிநீர் தேவைக்கும் போராடி வருகிறார்கள்.
கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய உத்தர கனரா மாவட்டத்திலும் வறட்சி நிலவுகிறது.
இந்த வறட்சி கொடிய விஷம் கொண்ட ராஜ நாகங்களையும் பாதித்துள்ளது. இப்படித்தான், மலைப்பகுதியிலிருந்து நீர் தேடி ஊருக்குள் வந்தது ஒரு ராஜநாகம்.
வனத்துறையினருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். பாம்பின் நிலையை பார்த்த வனத்துறை அதிகாரிகள், வாட்டர் பாட்டிலில் தண்ணீரை கொடுக்க அந்த பாம்பு தண்ணீரை குடித்தது காண்போரை வியக்க வைத்தது.
வனத்துறை அதிகாரிகளில் ஒருவர் பாம்பின் வாலை பிடித்துக்கொள்ள இன்னொருவர், அதன் தலை திடீரென உயர்த்தப்படாமல் இருக்க கம்பியால் பிடித்துக்கொண்டனர்.
வழக்கமாக தனது அருகே ஏதாவது பொருள் வந்தால் சீறும் இயல்புள்ள ராஜநாகம், குடிநீர் தாகத்தின் தாக்கத்தால், அப்படி எதையும் செய்யாமல் தண்ணீரை குடித்தது.


வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது! லால்காந்த தெரிவிப்பு


வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிந்தது!

லால்காந்த தெரிவிப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கட்டாயம் உண்ணாவிரதத்தை கைவிடுவார் என தான் அறிந்திருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
உண்ணாவிரதம் இருப்பதால் நீதிமன்றம் பிணை வழங்காது.
வீரவங்ச இதற்கு முன்னர் தும்முல்லை சந்தியில் .நா அலுவலகத்திற்கு அருகில் இவ்வாறான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார்.

அப்போது போல் தற்போதும் வீரவங்சவின் நடிப்பு தோல்வியில் முடிவடைந்தது எனவும் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி முசலி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்


வில்பத்து வர்த்தமானியை இரத்து செய்யக் கோரி

முசலி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்

முஸ்லிம்களின் பூர்வீக இடங்களை வில்பத்து வன பகுதிக்கான எல்லையாக இணைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக் கோரி பிரதேச மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று 31 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின்னர் முசலி பிரதேசத்திலுள்ள 22 கிராமங்களின் மக்களும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது பூர்வீக நிலங்களே காடுகளாக மாறியுள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் தமது வீடுகள் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல வருடகாலமாக நாங்கள் வாழ்ந்த காணிகளை வில்பத்து பிரதேசமாக பிரகடனப்படுத்தியதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று அம்மக்கள்கவலை வெளியிட்டுள்ளனர்.
மரிச்சுக்கட்டி, பலைக்குளி, கரடிக்குளி, கொண்டச்சி, அகத்திமுறிப்பு மற்றும் வேப்பங்குளம் ஆகிய பிரதேசங்களே, ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாக உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






விருட்ஷம் கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் சமூகப் பணிகளுக்கான ஓர் பதிவு


விருட்ம்

கலாநிதி ஏ.ஆர்.மன்சூர் அவர்களின்

சமூகப் பணிகளுக்கான ஓர் பதிவு

2013.10.19ம் நாள் மருதமுனை நகரில், “மருதமுனை மக்கள் மன்சூர் அவர்களுக்குச் சொரியும் நன்றிப் பூக்கள்என்ற கருப்பொருளில், முன்னாள்அமைச்சர் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் வைபவம் நடைபெற்று, அதன் அங்கமாகவிருட்சம்என்ற விழாமலர் ஒன்றும்வெளியீடு செய்து வைக்கப்பட்டது.
வைபவத்தின் போதுவிருட்சம்பிரதிகள் ஒரு சிலவே பகிர்வு செய்யப்பட்டிருந்தன. ஏதோ காரணங்களினால் தடைப்பட்டிருந்த விநியோகம் நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் இடம்பெறுவதைக் காணக்கூடியதாய் உள்ளது.
இவ்வாறான வைபவங்களின்போது மலர் வெளியீடுகள் இடம்பெறுவதும், அதனைப் பெற்றுப் புரட்டிப் பார்ப்பதும், படித்தறிவதும், ஆவணப்படுத்துவதும் வழமையாகிவிட்டது. விருட்சம் ஆவணப்படுத்தத் தகுந்தது எனலாம்.
அதன் முகவடிவு, விருட்ச நாயகன் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்களின் விருட்ச வசீகரத் தோற்றத்தினையும், மருதமுனையின் இரு பெரும் மகாவித்தியாலயங்களினது அழகுறு வடிவங்களையும் காட்டி 175 பக்கங்களுடன் 10" X 7" என்ற அளவில் கனதியானதொரு கவர்ச்சி வடிவாய் அமைந்துள்ளது.
அதனுள் மன்சூர் அவர்களின் நினைவுக் குறிப்புகள், அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளின் முப்பதுக்கும் மேற்பட்ட நிழல் படங்கள், அன்னார்பற்றி 94 ஆளுமைகளின் ஆக்கங்கள், நான்கு வர்த்தக நிறுவனங்களின் ஆசிச் செய்திகள் அடங்கலாக இன்னும் பல காத்திரமான அம்சங்கள்பொதிந்துள்ளன.
விருட்சம் ஒரு விழாமலர் என்ற இடத்தில் நின்று நூலொன்றுக்கானதன்மை அற்றிருந்தாலும், நூலுக்குப் போல் ஒரு நோக்கு அவசியப்படுகிறது. சாதாரண அரசியல்வாதியாக அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கான வெளியீடு என்ற வகையில் அமைந்திருந்தாலும், அவரிடத்தில் அற்புத மனிதம் ஒன்றினை இனம் கண்டு அதனைச் சுவைத்த நெஞ்சங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகள் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதால் விருட்சம் பற்றியதொரு பார்வை அவசியப்படுகிறது
மருதமுனை மக்களின் கலாநிதி மன்சூர் அவர்களுக்கான நன்றிப் பூக்கள்சொரியும் விழாஏன் எதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது என்ற விபரங்களை ஏற்பாட்டாளர்கள் என்ற வகையில்; தலைவர், செயலாளர், மலர்வெளியீட்டாளர் என்போர் மன்சூர் அவர்கள்; மருதமுனை மக்களின் தேவையறிந்து குறைகள் போக்க எவ்வாறெல்லாம் செயற்பட்டார் என்பதை அருகிலிருந்து அனுபவித்துணர்ந்த உண்மைகளை உலகறியச் செய்யும்முயற்சியாக விருட்சம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
விருட்ச நாயகன் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்கள் பொது வாழ்க்கையில் விருட்ச தன்னை ஒரு அரசியல்வாதியாக இணைத்துக் கொண்டு பொதுசன விருப்பு வெறுப்புகளுக்குள் உள்வாங்கப்படுவதால் விருட்சம் படிக்கப்படும் போது, .ஆர்.மன்சூர் அவர்களது செயற்பாட்டுமுறை, சேவைகளின் தன்மை, அவரது சுபாவம், அவரிடத்தில் காணப்படும் மனித நேயம், பண்பாட்டு முறை,எழிமை, நேர்மை போன்ற குணாம்சங்கள் அறியப்பட்டு அன்னாரது பெருமையை மேலும் உணரவும், அவரைப் புரியத் தவறியோர் புரிந்துகொள்ளவும் விருட்சம் துணைநிற்கின்றது.
விருட்சம் சுமந்துள்ள விருட்சம் கருத்துக்கள், எவரது ஆணைக்கும் ஏவலுக்கும் கட்டுப்பட்டோ, எந்த நன்மைகளையும் எதிர்பார்த்தோ வெளிக்காட்டிய கற்பனை வடிவங்களல்லாது அன்னாரை நெருங்கி அனுபவித்து சுவைத்து உதிர்த்த உணர்வு வடிவங்களாகக் காணப்படுவதை இம்மலரின் சிறப்பம்சமாகக் கொள்ளலாம்.
விருட்சம் சுமந்துள்ள ஆக்கங்களைத் தந்துள்ளவர்கள் பல்வேறுதுறைகளிலும் ஒளிவீசி நிற்கும் ஆளுமைகள் அவர்களுள்; ஆசிரியர்கள், அதிபர்கள், மார்க்க அறிஞர்கள், பள்ளிவாயில் நம்பிக்கை யாளர்கள், அரசியல் அவதானிகள், முன்னாள் இன்னாள் அரசியல் தலைமைகள், இளைய, முதிய ஊடகவியலாளர்கள், கல்வியியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக நூலகவியலாளர்கள், பதிவாளர்கள், பீடாதிபதிகள், உபவேந்தர்கள் மற்றும் சர்வதேச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் இன்னும் வைத்தியம், பொறியியல், விஞ்ஞானம், சட்டம், கணக்கியல்போன்ற துறைசார் நிபுணர்கள் மேலும்; சர்வதேச அமைப்புகளின் நிர்வாகிகள்,வெளிநாட்டுத் தூதுவர்கள் எனப் பல துறையினரும் நிறைந்துள்ளனர்.
இத்தகையோரது உள்ளங்களை நிறைத்து நிற்கும் உன்னத மனிதம் ஒன்றை சுமந்து நிற்பவர் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்கள் என்பதை அறியச் செய்யும் வழிகாட்டியாக மட்டுமன்றி கல்வியால் உயர்வு பெற்று உச்சத்தை தொட்டோரெல்லாம் ஒருமித்த குரலில் ஒருவரைச் சான்றோன் எனச்சொல்வது சாதாரணமானதுமல்ல. அந்த இடத்தைப் பெற்றுக் கொண்டவர் சாமான்யருமல்லர் என்பதையும் விருட்சம் சொல்லி நிற்கிறது.
இத்தகு ஆளுமைகளின் கருத்துக்களைத் தொட்டுச் சென்றாலே விரிவான நூல் உருப்பெற்று விடும். இருந்தாலும் ஒரு சோறு பதம் போல் தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளரும், மெய்யியல் உளவியல் பிரிவைச் சேர்ந்தவருமான .ஜே.எல்.வஸீல் MED, MPhL அவர்களின் கருத்தினை மட்டும் குறிப்பிடுவதன் மூலம் விருட்சத்தின் வெளியீட்டு நோக்கத்தையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.“
இவ்விதழுக்குக் குறிப்புகள் தேடி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்து நூலகம் நுழைந்து ஆய்வு செய்தபோது, அவர் பற்றி கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் எழுதி வெளியிட்ட சஞ்சிகை ஒன்றைத் தவிர வேறெதுவும் கண்டெடுக்க முடியாமல் கவலை அடைந்தேன். எனினும் அல்ஹாஜ் கலாநிதி .ஆர்.மன்சூர் ஏனையோர்களை நிறுவனங்களை வாழ்த்தி எழுதிய வாழ்த்துச் செய்திகள் பலவற்றை என்னால் காணமுடிந்தது. எனினும்,அல்ஹாஜ் கலாநிதி .ஆர்.மன்சூருக்கென்ற தனியான கனதியான நூல் ஒன்று இதுவரை எழுதி வெளியிடாமல் இருந்தபோதிலும் காலம் தாழ்த்தியாவது மருதமுனை மக்கள் செய்யும் இப்பதிவு, முழு இலங்கை முஸ்லிம்களின் கடமையைச் செய்வதாக உணர்கிறேன். அத்தோடு இலங்கை முஸ்லிம் வரலாற்றில் முக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரின் இப்பதிவினூடாக முழு முஸ்லிம் சமூகத்தின் இருப்பும் உறுதிப்படுத்தப்படுவது இப்பதிவின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையின் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் செய்த சமூகப் பணி ஏன் இதுவரை பதியப்படவில்லை என்பது என்னுள் எழுந்த முக்கியமான வினாவாகும். இன்றைய அரசியல்வாதிகள் அரசியலுக்குள் வந்தவுடன் சேவை செய்ய முதலே அவர்களது வரலாறுகளை, குடும்ப வரலாறுகளை நூலுருவாக்கும் இக்காலத்தில் அல்ஹாஜ் கலாநிதி .ஆர்.மன்சூர் சேவை ஏன் நூலுருவாக்கப்படவில்லை என்பதற்கு நான் ஆராய்ந்து கண்ட விடை அவர் புகழையோ, பாராட்டையோ மனிதர்களிடம் இருந்து நேரடியாக எதிர்பார்க்காதவர் என்று தெளிவாகிறது. அந்த வகையில் அவர் வெள்ளைமனம் கொண்டவர் என்பதற்கு இது சான்று பகர்கிறதுஎனத் தனது கருத்து வெளிப்பாட்டைத் தொடர்வதைக் குறிப்பிடலாம்.
எனவே விருட்சம் கலாநிதி .ஆர்.மன்சூர் அவர்களின் சமூகப்பணிக்கான கனதியான தனியான பதிவென்பது தெளிவு.

-    மக்கள் விருப்பம்