தோல்விகளுக்கு
பாகிஸ்தானை பலிகடா ஆக்குவதா?
ட்ரம்ப்பை விளாசித் தள்ளிய இம்ரான் கான்
அமெரிக்காவுக்கு
பாகிஸ்தானால் எந்த வித நன்மையும் இல்லை,
பாகிஸ்தான் என்ன செய்து விட்டது? என்று
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பாகிஸ்தானைத் தாக்க
பாகிஸ்தான். பிரதமர் இம்ரான் கான் ட்ரம்புக்குப்
பதிலடி கொடுத்துள்ளார்.
தொடர்
ட்வீட்களில் இம்ரான் கான் பதிலடி கொடுக்கும்
போது, “9/11 தாக்குதலில் எந்த ஒரு பாகிஸ்தானியரும்
இல்லை இருந்தாலும்
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்
அமெரிக்காவுடன் பாகிஸ்தான் இணைந்தது.
இதன்
மூலம் பாகிஸ்தான்
75,000 உயிர்களைப் பலி கொடுத்துள்ளது.
123 பில்லியன் டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க உதவி
என்பது வெறும்
20 பில்லியன் டாலர்கள்தான்.
எங்கள்
பழங்குடியினர் வாழும் பகுதிகள் நாசமானது. லட்சக்கணக்கானோர்
வீடிழந்து அகதிகளாகினர்.
சாதாரண பாகிஸ்தானியரின்
ரத்தம் உறிஞ்சப்பட்டது.
தொடர்ந்து
அமெரிக்காவுக்கு தரை மற்றும் வான்வழி தொடர்பு
வசதிகளைப் பாகிஸ்தான்
வழங்கி வருகிறது,
வேறு எந்தக்
கூட்டணி நாடாவது
இத்தனை தியாகங்களைச்
செய்துள்ளதா?
உங்களுடைய
தோல்விகளுக்குப் பாகிஸ்தானை பலிகடாவாக்குவதற்குப்
பதிலாக 140,000 நேட்டோ படைகள், 250,000 ஆப்கான் படைகள்
ஆப்கான் போரில்
1 ட்ரில்லியன் டாலர்கள் செலவு செய்து தாலிபான்கள்
முன்பை விட
வலுவாக எழுச்சிபெற்றது
எப்படி என்பதை
ட்ரம்ப் யோசிக்கட்டும்”
என்று அமெரிக்க
ஜனாதிபதி ட்ரம்பை விளாசித்தள்ளினார்.
கடந்த
செப்டம்ப்ரில் ட்ரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கான 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ராணுவ
உதவியை நிறுத்தி
அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட்
டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்
இதற்குப் பதிலடி கொடுக்கும் போதே இவ்வாறு இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதோஅமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி,
சர்வதேச பயங்கரவாதியான
ஒசாமா பின்லேடன்
போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்காக
பாகிஸ்தான் செய்தது என்ன? என ஜனாதிபதி டிரம்ப்
கேள்வி எழுப்பியிருந்தார்.
அமெரிக்க
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனியார்
தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
பயங்கரவாத ஒழிப்பு
நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா
அளித்துவந்த நிதியுதவியை நிறுத்துமாறு உத்தரவிட்டது தொடர்பாக
டிரம்ப்பிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு
பதிலளித்த டிரம்ப்,
‘சர்வதேச பயங்கரவாதியான
ஒசாமா பின்லேடன்
போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர அமெரிக்காவுக்கு
பாகிஸ்தான் ஒரு மண்ணும் செய்யவில்லை’ என
ஆவேசமாக கூறினார்.
பாகிஸ்தானில்
நிம்மதியாக, அழகாக வாழ்வதைப்போல் நல்ல விஷயம்
ஏதுமிருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால், அந்நாட்டின்
ராணுவ தலைமையகத்தின்
அருகே (ஒசாமா
பின்லேடன் பதுங்கியிருந்த
அபோட்டாபாத் பகுதி) பாதுகாப்பாக வாழ்வது அதைவிட
நல்ல விஷயம்.
அவர் அங்கேதான்
வாழ்ந்து வருகிறார்
என்பது பாகிஸ்தானில்
உள்ள அனைவருக்குமே
தெரிந்திருந்தது.
ஆனால்,
இது தெரியாமல்
நாம் ஆண்டுதோறும்
பாகிஸ்தானுக்கு 130 கோடி டாலர்களை
கொடுத்து வந்தோம்.
அவர்கள் நமக்காக
ஒன்றுமே செய்ததில்லை
என்பதால்தான், இனி இந்த நிதியை வழங்க
கூடாது என
நான் உத்தரவிட்டேன்
என்றும் டிரம்ப்
டிருந்தார்.
0 comments:
Post a Comment