மிளகாய்த்தூள் தூவி சர்ச்சையில் சிக்கிய எம்.பி
பொலிஸாருக்கு விடுத்துள்ள அறிக்கை
நாடாளுமன்றத்தில்
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்
சம்பவத்தின் போது பொலிஸ் அதிகாரிகளோ அல்லது
அரச அதிகாரிகளோ
பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக வருந்துவதாக
ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன
ரணவீர தெரிவித்துள்ளார்.
இதனை
அறிக்கை ஒன்றின் மூலம் அவர்
இன்று அறிவித்துள்ளார்.
ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர பொலிஸ் அலுவலர்
ஒருவரை தாக்குவதும்,
அவர்கள் மீது
மிளகாய்த்தூளை வீசுவதுமான காட்சி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியுள்ளது.
0 comments:
Post a Comment