தலையில் புனித பேழையை வைத்த பின்னர்
வேஷ்டி கழன்று விழுந்தது நிலைமையே
மஹிந்தவின் தற்போதைய நிலை!
ஐக்கிய இடதுசாரி முன்னணியின்
அரசியல் சபை உறுப்பினர் சமீர பெரேரா கூறுகின்றார்
தலையில்
புனித பேழையை வைத்த பின்னர்
வேஷ்டி கழன்று விழுந்தது போன்ற
நிலைமையே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு
ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இடதுசாரி முன்னணியின்
அரசியல் சபை உறுப்பினர் சமீர
பெரேரா தெரிவித்துள்ளார்.
தலையில்
இருக்கும் புனித பேழையை கீழே
வைக்க முடியாது, வேஷ்டியை கட்டவும் முடியாத நிலைமையில் மஹிந்த
ராஜபக்ஸ இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மஹிந்த
ராஜபக்ஸவிடம் பதவி இருப்பதாகவும், அதிகாரம்
இல்லாத காரணத்தினால், அவர் ஆடை களைந்தவராக
இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில்
நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சமீர பெரேரா இதனை
குறிப்பிட்டுள்ளார்.
முழு
உலகத்திற்கும் தெரியும்படி மஹிந்த ராஜபக்ஸ பதவியை
ஒன்றை தலையில் சுமந்திக்கொண்டு, அதிகாரம்
இன்றி ஆடைகளை களைந்தவராக காணப்படுகிறார்.
பதவியை
மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரம் இன்றி, மிகவும் கீழ்த்தரமான
முறையில் அரசாங்கம் இருப்பதாக கூறுகிறார். இதுதான் மஹிந்த ராஜபக்ஸவின்
வெட்கமில்லாத அரசியல்.
அரசியலில்
ஈடுபடும் போது ஒழுக்க நெறிமுறை
இருக்க வேண்டும். எனினும் மஹிந்த ராஜபக்ஸவுக்கு
அது இல்லை. குறைந்தது மஹிந்த
ராஜபக்ஸவின் மனசாட்சிக்கும் வெட்கமில்லை.
இது
தான் மஹிந்த ராஜபக்ஸவின் அரசியலில்
இருக்கும் மோசமான விடயங்கள். இவ்வாறான
அரசியல் கலாசாரத்தையே அவர் கடந்த 10 ஆண்டுகளில்
நாட்டுக்கு பரிசளித்தார்.
அந்த
பரிசின் பிரதிபலனை கடந்த தினங்களில் நாடாளுமன்றத்தில்
காண முடிந்தது எனவும் சமீர பெரேரா
மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment