Sunday, March 31, 2019

இலங்கையில் கடந்த மே, டிசம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழையால் கிடைக்கப்பெற்ற நீர் எங்கே? தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா? அமைச்சர்களிடம் மக்கள் கேள்வி


இலங்கையில் கடந்த மே, டிசம்பர் மாதங்களில்
பெய்த பலத்த மழையால் கிடைக்கப்பெற்ற நீர் எங்கே?
தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
அமைச்சர்களிடம் மக்கள் கேள்வி
இலங்கையில் கடந்த மே மாதமும் டிசம்பர் மாதமும் பலத்த மழை பெய்து வெள்ளத்தினால் 17 மாவட்டங்கள் நீரில் மூழ்கி 8 பேர் வரை பலியாகியுமிருந்தனர்
இந்நிலையில், தற்போது நீர் தேக்கங்களில் நீர் இல்லை அதனால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டியுள்ளது என அரசாங்கம் கூறுவதன் மூலம் இந்த அரசாங்கத்தில் தூர நோக்குள்ள அமைச்சர்கள் இல்லையா? எதிர்கால நடவடிக்கைகளுக்காக திட்டமிட்டு செயலாற்றக்கூடிய நீர்ப்பாசன பொறியியலாளர்கள் இல்லையா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மழை வெள்ளத்தால் நிரம்பி வழிந்த நீர் எங்கே போய்விட்டது? அது முற்றாக கடலுக்குள் செலுத்தப்பட்டுவிட்டதா? அந்த  நீரை தேக்கங்களில் பிடித்து வைப்பதற்கு நீர்ப்பாசன பொறியியலாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லையா?
நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத்திற்குப் பொறுப்பான அமைச்சுக்கள் இவைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்விகளை மக்கள் எழுப்புகின்றனர்.






மாகாண சபைகளில் 341 உள்ளூராட்சி நிறுவனங்களில் சேவை செய்யும் ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் கிடைக்குமா?


மாகாண சபைகளில் 341 உள்ளூராட்சி நிறுவனங்களில்
சேவை செய்யும் ஊழியர்களுக்கு
மாதாந்த சம்பளம் கிடைக்குமா?



தமிழ், சிங்கள புத்தாண்டிற்கு முன்னர் ஐந்தரை லட்சம் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்க முடியாதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு, உள்ளக விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்தமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் வெளியிட்ட அறிக்கைக்கமைய ஒன்பது மாகாண சபைகளிலும், 341 உள்ளூராட்சி நிறுவனங்களும் சேவை செய்யும் ஊழியர்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி வரவு திட்டத்தை தோல்வியடைய செய்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பாரிய சிக்கலுக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடைய செய்தமையினால் அரசாங்கத்திற்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை. எனினும் அப்பாவி அரச ஊழியர்களுக்கே பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் செயல்பாடுகள் தொடர்பில், முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் கடும் விமர்சனம் முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மாறாக, ‘மெஸ்ரோ’ அமைப்பைப் பலப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு


ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் செயல்பாடுகள் தொடர்பில்,
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில்
கடும் விமர்சனம்
முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மாறாக, ‘மெஸ்ரோஅமைப்பைப் பலப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு



முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தொடர்பில் பாரிய விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் .எச். சித்தீக் காரியப்பர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடத்தில் நடந்த விடயங்கள் குறித்து, சித்தீக் காரியப்பர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு விவரித்துள்ளார்.
விவகாரங்களை விட சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்  முக்கியத்துவம் பெற்றிருந்தது.

கட்சியின் முக்கியஸ்தரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட, சில உயர்பீட உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கட்சியின் முக்கியஸ்தர்களான சாய்ந்தமருது எம்.ஐ.எம். பிர்தௌஸ், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் ஆகியோர் சாய்ந்தமருதில் தாங்கள் முகங்கொண்ட விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் விடயங்களை விபரித்து கவலையை வெளியிட்டனர்.

இருப்பினும், சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றம் வழங்க வேண்டும் என்ற விடயத்தில், உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் காணப்பட்டனர். அதனை வழங்க வேண்டும் என்பதில் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மிகக் கரிசனையுடன் காணப்பட்டனர்.

ஆனால், கட்சியின் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தனிகுனிந்த நிலையில் மௌனியாகக் காணப்பட்டார் எனத் தெரிகிறது.

சாய்ந்தமருது மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் தங்களால் அங்கு அரசியல் செய்யவும் முடியாது என்று, பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதற்கு மேலதிகமாக ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் செயற்பாடுகளை, சிலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கட்சிப் பணிகளை அவர் சரியாக முன்னெடுப்பதில்லை. முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்புகளை அவர் வலுப்படுத்துவதில்லை. மாறாக, ‘மெஸ்ரோஅமைப்பைப் பலப்படுத்தி அதன் மூலம் தனது இருப்பைத் தக்க வைக்க முயற்சிக்கிறார்.

ராஜாங்க அமைச்சர் ஹரீஸின் நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் கொண்டிருந்தால், கட்சி தனித்து விடப்படும் என்ற அடிப்படையில் அங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், கட்சியின் தலைவரும் அமைச்சருமான  ரவூப் ஹக்கீம், அனைத்து விடயங்களையும் மிகக் கரிசனையுடன் கேட்டவராக; ‘சாய்ந்தமருது விவகாரத்தை தொடர்ச்சியாக இதே நிலையில் வைத்துக் கொள்ளக் கூடாது. இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மக்களின் அபிலாஷையை நிறைவேற்ற வேண்டும்என்ற அடிப்படையில் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
.எச். சித்தீக் காரியப்பர்

எதிர்வரும் வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுள்ளது


எதிர்வரும் வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்
            முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு   
வளிமண்டலவியல் திணைக்களம்
பொதுமக்களை கேட்டுள்ளது




எதிர்வரும் வாரம் அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்ப்படுவதால், பொதுமக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இலங்கையில் சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதால், இக்காலப்பகுதயில் பகல் மற்றும் இரவுவேளைகளில்  அதிகூடிய வெப்பநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

தென் மாகாணத்தில் திக்வெல்ல, கக்கணதுர, கொட்டவில ஆகிய பகுதிகளில் எதிர்வரும் 5ஆம் திகதி சூரியன் உச்சம் கொடுக்கும் என்பதோடு, வட மாகாணத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி சூரியன் உச்சம் கொடுக்கும்.

மேலும், அதிகூடிய வெப்பநிலை குருநாகல் மாவட்டத்தில் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

குருநாகல் மாவட்டத்தில் சாதாரணமாக நிலவும் 32பாகை செல்சியஸ் வெப்பநிலை, தற்போது 38.8பாகை செல்சியசாக அதிகரித்துக் காணப்படுகின்றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வெப்பமான காலப்பகுதியில் தண்ணீரை அதிகளவில் அருந்தி தங்களைப் பாதுகாக்குமாறும் பொதுமக்களிடம் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் வட மேல் மாகாணம் மற்றும் அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை சுட்டி எனப்படும் உடல் வெப்பநிலை பாரிய அளவில் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளை களனியில் உள்ள கோனவல பகுதியில் 769 கிலோகிராம் கொக்கெய்ன் எரியூட்டப்படவுள்ளன


நாளை களனியில் உள்ள கோனவல பகுதியில்
769 கிலோகிராம் கொக்கெய்ன் எரியூட்டப்படவுள்ளன

சுமார் 769 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் நாளை களனியில் உள்ள கோனவல என்ற இடத்தில் வைத்து எரியூட்டப்படவுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருள் தொகை நீதிமன்ற சாட்சியங்களுக்காக இதுவரை பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன.

இந்த எரியூட்டல் நிகழ்வுக்கு ஊடகங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு செயலணியின் பணிப்பாளர் சமந்த கியத்தலவாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை துபாயில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரானும் சன்ஜா என்பவரும் போலி கடவுச்சீட்டுக்களுடனேயே கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அடுத்த ஒரு மணித்தியாலத்தில் மாலைத்தீவுக்கு புறப்படவிருந்த விமானத்தில் ஏறும் நோக்குடன் டிக்கட்டுக்களையும் கொள்வனவு செய்து வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அந்த முயற்சி கைக்கூடவில்லை. இம்ரான், 2017 ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலை பஸ்ஸின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்து பாதாள உலகத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அன்றைய தினமே மாலையில் படகு ஒன்றில் இந்தியாவுக்கு தப்பிச்சென்றார் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



14 துறைசார் இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி


14 துறைசார் இராஜதந்திரிகளுக்கு
வெளிநாட்டு தூதுவர் பதவி



வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் தூதுவர்களாக நியமிக்கப்படுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பரிந்துரைக்கப்பட்ட 14 துறைசார் இராஜதந்திரிகளின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

வெளிவிவகார சேவையின் முதலாம் தரத்தைச் சேர்ந்த, சிரேஸ்ட அதிகாரிகளுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

இதன்படி,
நியூயோர்க்கில் உள்ள .நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக, கே.டி.செனிவிரத்னவும்,
அமெரிக்காவுக்கான தூதுவராக றொட்னி பெரேராவும்,
 பெல்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதமும்,
நெதர்லாந்துக்கான தூதுவராக நாகாலந்தவும்,
இந்தோனேசியாவுக்கான தூதுவராக, வை.கே.குணசேகரவும்,
தாய்லாந்துக்கான தூதுவராக ஜேஏஎஸ்கே ஜெயசூரியவும்,
பஹ்ரெயினுக்கான தூதுவராக பிரதீபா சாரமும்,
பிலிப்பைசுக்கான தூதுவராக சோபினி குணசேகரவும்,
ஒஸ்ரியாவுக்கான தூதுவராக சரோஜா சிறிசேனவும்,
ஓமானுக்கான தூதுவராக அமீரஜ்வாட்டும்,
 ஐக்கிய அரபு குடியரசுக்கான தூதுவராக ஜேபி ஜெயசிங்கவும்,
இஸ்ரேலுக்கான தூதுவராக வருண வில்பத்தவும்,
சிங்கப்பூருக்கான தூதுவராக சசிகலா பிரேமவர்த்தனவும்,
 துருக்கிக்கான தூதுவராக ரிஸ்வி ஹசனும் நியமிக்கப்படவுள்ளனர்.

வெளிநாடுகளில் இலங்கை 52 தூதரகங்களை கொண்டிருக்கின்றது.

இந்த நியமனங்களின் மூலம், வெளிநாட்டு தூதரகங்களின் முதன்மை அதிகாரிப் பதவிகளில் தற்போது, 36.57 வீதமாக உள்ள துறை சார் இராஜதந்திரிகளின் பங்கு, 46 வீதமாக அதிகரிக்கும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலைய ஆரம்ப நிகழ்வு


இலங்கை மின்சார சபையின்
சாய்ந்தமருது மின் பாவனையாளர்
சேவை நிலைய ஆரம்ப நிகழ்வு

இலங்கை மின்சார சபையின் சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலைய ஆரம்ப நிகழ்வும் புதிய வாகனம் கையளிப்பு நிகழ்வும் கல்முனை பிரதேச பிரதம மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்..பர்ஹான்  அவர்களால் இன்று (31.03.2019)கையளிக்கப்பட்டது.

அண்மையில் பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய நிர்வாக கட்டிடத்தை அவரது தனி முயற்சியினால், அமைச்சர் ரவி கருணாநாயக்கவைக் கொண்டு திறந்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.







Saturday, March 30, 2019

வந்தாறுமூலை கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின!


வந்தாறுமூலை கோர விபத்தில்
உயிரிழந்தவர்களின் விபரங்கள் வெளியாகின!

மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில் தீயில் கருகி ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்த விபத்தில் வேப்பவுஸ் வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், வேப்பவுஸ் 3ம் குறுக்கு வீதி பலாச்சோலை வந்தாறுமூலையைச் சேர்ந்த 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், தீப்பற்றி எரிந்தவர் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

வாழைச்சேனை பகுதியில் இருந்து மட்டக்களப்பை நோக்கி இரவு 7.30 மணிக்கு 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சமாந்தரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இரு மோட்டர் சைக்கிள்களும் விபத்துக்குள்ளாளன நிலையில் பின் பகுதியல் வந்த மோட்டர் சைக்கிளில் வந்த இருவரும் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகினர்.

இந்த நிலையில் இரு மோட்டர்சைக்கிள் தீப்பற்றி எரிந்ததில் அதில் ஒருவர் தீக்கிரையானதுடன், ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் சடலங்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.






மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி! இரு கைகளும் இன்றி பரீட்சையில் அபார சாதனை



மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி!
இரு கைகளும் இன்றி பரீட்சையில் அபார சாதனை

உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார்.

எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார்.

அவர் சாதாரண தர பரீட்சையில் 8A, B சித்தியை பெற்று பாடசாலைக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

எஹெலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவி இம்முறை சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தியை பெற்றுள்ளார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், தனது பாடசாலை நண்பர்களின் உதவியுடன் பரீட்சையில் விசேட வெற்றியை பெற்று கொள்ள முடிந்ததாக ரஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் உள்ள ஒரு பாதத்தை மாத்திரம் பயன்படுத்தி அவர் பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.

அவரது தாய் மற்றும் தந்தை அதே பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

இரண்டு கைகள் மற்றும் ஒரு காலின்றி வாழும் இந்த மாணவி, இலங்கை மக்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

மன தைரியத்தை மாத்திரம் கொண்டு இந்த மாணவி சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்





Friday, March 29, 2019

ருசியான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி


ருசியான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி

   
மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் சீஸ் மிளகாய் பஜ்ஜி. இந்த பஜ்ஜியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ருசியான ஸ்நாக்ஸ் சீஸ் மிளகாய் பஜ்ஜி
தேவையான பொருட்கள் :

பஜ்ஜி மிளகாய் - 10,
கடலைமாவு - 150 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
ஓமம் - கால் சிட்டிகை,
உப்பு - தேவையான அளவு,
மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி ,
சீஸ் ஸ்லைஸ் - 4 ,
பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்ஸ் - 50 கிராம்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை

ஒரு பாத்திரத்தல் கடலை மாவு, அரிசி மாவுடன் மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும்.

பஜ்ஜி மிளகாயை நடுவில் கீறி, விதையை நீக்கிவிட்டு, சீஸை உள்ளே வைத்து மூடவும்.

பொரிக்கும் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்திருக்கும் மாவில் பஜ்ஜி போல தோய்த்து பொடித்த கார்ன்ஸ்ஃப்ளேக்சில் தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.

ருசியான சீஸ் மிளகாய் பஜ்ஜி தயார்.