இறுதி ஊர்வலத்தின் மீது விமானப்படை தாக்குதல்
- 150 பேர் பலி 500 பேர் படுகாயம்
ஏமன் நாட்டில் இறுதி ஊர்வலத்தின் மீது அந்நாட்டின் விமானப்படை
நடத்திய அதிரடி தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் 500 பேர் படுகாயமடைந்தனர்.
ஏமன் நாட்டில் ஹவுத்தி போராளிகள் குழுவை சேர்ந்தவரின் இறுதி அடக்கத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்றபோது, சவூதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதலில் 150-க்கும் அதிகமானோர் பலியாகினர். சுமார் 500 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஏமனில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த மனிதநேயமற்ற தாக்குதல்மீது உரிய விசாரணை நடத்தவும், இனியும் இதுபோன்ற தாக்குதல் தொடராதிருக்க சர்வதேச சமுதாயம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த கண்காணிப்பகம் வலியுறுத்தி உள்ளது.


0 comments:
Post a Comment