Saturday, October 31, 2015

224 பேர் பலியான ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு


224 பேர் பலியான ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக

ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு

224 பேர் பலியான ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சினாயில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் ட்பட 224 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான KGL9268- என்ற 321 (Airbus 321) ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் 217 பயணிகள், 7 விமானிகள் உட்பட 224 பேருடன் புறப்பட்டது.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை இழந்தது.
இதையடுத்து, விமானம் மாயமானது குறித்து நடத்தப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து எகிப்து இராணுவ மீட்பு படை விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதில், அந்த விமானம் சினாய் மலைப்பகுதியில் தெற்கு எல்-அரிஷ் ஹசானாவில் விழுந்து நொறுங்கி கிடந்தது அடையாளம் காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு 45-க்கும் மேற்பட்ட அம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த 17 பேர் குழந்தைகள் உட்பட 224 பேரும் உயிரிழந்ததை எகிப்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 138 பெண்கள், 62 ஆண்கள்,17 சிறுவர்கள் அடங்குவர். பெரும்பாலானோர் ரஷ்யர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்ய விமானத்தை நாங்கள் சுட்டு வீழ்த்தினோம் என்று ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' இளைஞர் மாநாடு (படங்கள்)


'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு'

இளைஞர் மாநாடு (படங்கள்)

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று 31 ஆம் திகதி சனிக்கிழமை காலை முதல் மாலை 7.30 மணி வரை நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பான 'இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில், நடைபெற்ற இம் மாநாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சி சார்பான பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


















ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழப்பு 100 உடல்கள் மீட்பு என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு


ரஷ்ய விமானத்தில் பயணம் செய்த 224 பேரும் உயிரிழப்பு

100 உடல்கள் மீட்பு என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சினாயில் ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் குழந்தைகள் ட்பட 224 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்து நாட்டில் உள்ள சினாய் கோஸ்டல் ரிசார்ட்டில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீ்ட்டர்ஸ்பெர்கிற்கு மெட்ரோஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான KGL9268- என்ற 321 (Airbus 321) ஏர்பஸ் ரக பயணிகள் விமானம் 217 பயணிகள், 7 விமானிகள் ட்பட 224 பேருடன் புறப்பட்டது.
இந்நிலையில், விமானம் புறப்பட்ட 23 நிமிடங்களில் சினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ரேடார் தொடர்பை இழந்தது.
இதையடுத்து, விமானம் மாயமானது குறித்து நடத்தப்பட்டு வரும் முதற்கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து எகிப்து ராணுவ மீட்பு படை விமானங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதில், அந்த விமானம் சினாய் மலைப்பகுதியில் தெற்கு எல்-அரிஷ் ஹசானாவில் விழுந்து நொறுங்கி கிடந்தது அடையாளம் காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து, உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு 45-க்கும் மேற்பட்ட ம்புலன்ஸ் வண்டிகள் அனுப்பப்பட்டன.
இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த 17 பேர் குழந்தைகள் ட்பட 224 பேரும் உயிரிழந்ததை எகிப்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 138 பெண்கள், 62 ஆண்கள்,17 சிறுவர்கள் அடங்குவர். பெரும்பாலானோர் ரஷ்யர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட உடல்களை மீட்டுள்ளதாக எகிப்து மீட்பு படை தெரிவித்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.



கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அவல நிலை பாரீர்!

கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின்

அவல நிலை பாரீர்!

Mahjoon Mohammed Abubacker

இன்றைய சூழ்நிலைகளில் கல்முனை ஸாஹிராக்கல்லூரியை பார்க்கின்ற போதுதான் புரிகின்றது எந்த அளவுக்கு கல்லூரி நிர்வாகமும் பழைய மாணவர் சங்கமும் செயற்படுகின்றது என்று.
இந்த அவலநிலையை நோக்குகின்ற போது அண்மைக்காலமாக பெய்து வரும் அடைமழை காரணமாக கல்லூரியின் விளையாட்டு மைதானம் நீரினால் மூழ்கி காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக கல்லூரி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். .
எனவே மாணவர்களின் நலன்கருதி கல்லூரி நிர்வாகமும் பழையமாணவர் சங்கமும் விரைவாக செயற்படவேண்டும்.

இதனடிப்படையில் விளையாட்டுமைதானத்தை கல்லூரி நிதியில் இருந்தும் பழையமாணவர்கள் சங்க நிதியில் இருந்தும் கல், மண் மற்றும் கிரவல் போன்றவைகளை.இட்டாவது சரி செய்ய வேண்டும். இவற்றுக்கு முன்னதாக கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள சகல தழ்ந்த  இடங்களையும் சரி செய்து அதற்க்குறிய வடிகான்களை அமைப்பீர்களானால் நிச்சயமாக கல்லூரியின் நடவடிக்கைகைகளை மேற்க்கொள்ளலாம்.

அலி அஹமட் (ரசாதி) தலைமையில் புனித உம்ரா பயணம்

அலி அஹமட் (ரசாதி) லைமையில்
புனித உம்ரா பயம்

புனித உம்ரா பயம் ரப்பானியா ரவல்ஸ் மூலம் அல்ஹாபிழ் மெளலவி அல்ஹாஜ். அலி அஹமட் (ரசாதி ) லைமையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில்

contact. 0777708540 or 0777662852


சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி 23 பேர் படுகாயம்

சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்ததில்
17 பேர் பலி 23 பேர் படுகாயம்

மத்திய சீனாவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியாகி உள்ளனர். 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தில் த்திவாரம் பலவீனமாக இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.




224 பயணிகளுடன் சென்ற ரஷ்ய KGL9268 விமானம் வெடித்து சிதறியது எகிப்து பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்

224 பயணிகளுடன் சென்ற ரஷ்ய KGL9268 விமானம்

வெடித்து சிதறியது

எகிப்து பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார்

ரஷ்ய நாட்டு KGL9268  விமானம் விபத்துக்குளாகியதாக எகிப்து பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். எகிப்தில் இருந்து 224 பயணிகளுடன் ரஷ்யா நோக்கி இந்த விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 17 சிறுவர்கள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விமானம், ஷினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அதனையடுத்து, துருக்கி விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட அந்த விமானம், பத்திரமாக இருப்பதாக மற்றொரு தகவல் வெளியானது.
இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று எகிப்து நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்

விமானம் விபத்துக்குள்ளானதாக  எகிப்து நாட்டு பிரதமர் தெரிவித்துள்ள தகவலை ஏஎஃபி செய்தி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Friday, October 30, 2015

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடு ஆரம்பம்

'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு'
முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் மாநாடு ஆரம்பம்


'தலைவர் அஷ்ரப் நினைவு நிகழ்வு' எனும் தலைப்பிலான இளைஞர் மாநாடு தற்போது சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பான 'இளைஞர் காங்கிரஸின் ஏற்பாட்டில், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இம் மாநாட்டில், கட்சியின் தேசிய தலைவரும், அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டுள்ளார்.











ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா திருமண நிகழ்ச்சி! (படங்கள்)


ஹர்பஜன் சிங் - நடிகை கீதா பஸ்ரா

திருமண நிகழ்ச்சி! (படங்கள்)


ஜலந்தரில் உள்ள குருத்துவாராவில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா திருமணம் வியாழக்கிழமை நடைபெற்றது.