தனியார் பஸ்  ஒன்றும்
இலங்கை போக்குவரத்து சேவைக்கு
சொந்தமான பஸ் ஒன்றும்
மோதிக் கொண்டதில் 6 பேர் பலி
இன்று அதிகாலையில் சம்பவம்

களுத்துறை, வஸ்கடுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த விபத்தில் 56 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தனியார் பஸ்  ஒன்றும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 5.15 மணியளவில் எல்பிட்டியவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ்ஸும் கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் 3 பெண்களும் 3 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top