முஸ்லிம் காங்கிரஸை காப்பாற்ற
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் கிளர்ந்தெழ வேண்டும்.
பஷீர் சேகு தாவூத்  தெரிவிப்பு


துப்பாக்கி குண்டுகளுக்கு அஞ்சாமல் பல உயிர்களை காவு கொடுத்து முஸ்லிம் காங்கிரஸை  உருவாக்கிய அம்பாறை மாவட்டத்தில் வாழுகின்ற தன்மானமுள்ள, ரோசமுள்ள, கட்சியின் மீது சரியான பற்றுள்ள, இளைஞர்கள், பெரியவர்கள், காத்தவர்கள் என எல்லோரும் கிளர்ந்தெழுந்து தனி முதலையிடம் அகப்பட்டு தவிர்க்கும் முஸ்லிம் காங்கிரஸை மீட்டெடுக்கும் போராட்டத்தில் அணி திரளுமாறு முன்னாள் அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான  பசீர் சேகுதாவூத்  தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மேலும் தனது பேச்சில்  பசீர் தெரிவித்ததாவது..
ஹசன் அலி எனும் முஸ்லிம் சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒரு ஸ்தாபக உறுப்பினர் இருந்தால்தான் முஸ்லிம் காங்கிரஸ் பாதுகாக்கப்பட்டு சமூகத்துக்கான குரலைக் கொண்ட கட்சியாக செயற்படும். வேறு யாரு வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸை பெரும்பான்மை கட்சிகளினுடைய அடிமை கட்சியாகவே மாற்றிவிடுவார்கள்.

வடகிழக்குக்கு வெளியில் தலைவர் இருக்கின்ற பொழுது அடுத்த அதிகாரம் பொருந்திய செயலாளர் கிழக்கிலே இருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது ரவூப் ஹக்கீம் தன்னிச்சையாக செயற்பட்டு கிழக்கிலே அதிகாரம் இல்லாத செயலாளரை நியமித்துள்ளதுடன், அதிகாரம் அனைத்தையும் அவரே வைத்துள்ளார். இது எவ்வாறென்றால் முழுமையாக நிரப்பிய நெல் மூட்டையை அவர் சுமந்து கொண்டு வெற்றுச்சாக்கினை கிழக்கு மக்களின் மேலே வீசியுள்ளதற்கு சமனாகும்.

அத்தோடு இன்று முஸ்லிம் காங்கிரசிர்குள் ரவூப் ஹக்கீமுக்கு ஜால்றா போட்டுக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அன்று இஸ்தாபக தலைவர் அஸ்ரப்பை பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் எதிர்த்தவர்களாகும். அஸ்ரப்பை எதிர்த்தவர்கள் எல்லோரையும் தேடிப்பிடித்து ஹக்கீம் தனக்கு சாதகமாக உயர் பீடத்தில் கையினை உயர்த்துவதற்காக, உயர் பீட உறுப்பினர் பதவிகளையும் கொடுத்து கூடவே வைத்துள்ளார். மறுபக்கத்திலே அவர்கள் எல்லோரும் ஐக்கிய தேசிய கட்சியின் அனுதாபிகளாகவும் இருக்கின்றனர்.

ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களை கொண்ட அஸ்ரப்பின் குடும்பத்துக்கு எதிரானவர்களே இன்று முஸ்லிம் காங்கிரசின் தலைமையோடு கைகோர்த்து முஸ்லிம் காங்கிரசினை தனிச்சியாக ஹக்கீம் ஆட்டிப்படைப்பதற்கு ஜால்றா போடுகின்றனர். எனவே மத்திய அரசியல் ஐக்கிய தேசிய கட்சி எதனை விருபுகின்றதோ அதனை செயற்படுத்தும் தலைமையாகவும், உறுப்பினர்களுமாகவே முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றது. அதனை பொறுத்துக்கொள்ள முடியாத இறுதி தறுவாயில் தலைமைக்கு விளங்கப்படுத்திய வேளையில்தான் என்னையும் ஹசன் அலியையும் கடைசியாக ஹக்கீம் வெளியில் போட்டார்.

நான் ஒரு பொழுதும் முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொள்ள வில்லை. என்னை இஸ்தாபக தலைவர் அஸ்ரஃப் அழைத்துக்கொண்டு போனார். சேகு இஸ்ஸதீன் ஒரு இராணுவ தலைவர் போல ஆரம்பகாலத்தில் கட்சியினால் பார்க்கப்பட்ட நிலையில் அவர் வெளியேறியதினால் சேகு இஸ்ஸதீனை விட உண்மையான சேகுவை நான் கூட்டி வருகின்றேன் என கூறி அஸ்ரஃப் ஈரோஸ் தோழனாக இருந்த என்னை முஸ்லிம் காங்கிரசிற்குள் கூட்டிச்சென்றார்.

முஸ்லிம்களுக்கு 1990களில் ஏற்பட்ட பிரச்சனைகளை மையமாக வைத்து நானும் சிந்தித்தினால் அஸ்ரஃப் அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று முஸ்லிம் காங்கிரஸ் எனும் சமூகத்தின் உரிமைக்குரலுக்குள் சென்றேன். ஆகவே இன்று தனி மனிதன் எனும் முதலையிடம் அகப்பட்டு தவிக்கும் அஸ்ரப் இஸ்தாபித்த முஸ்லிம்களின் உரிமை குரலான முஸ்லிம் காங்கிரசினை உருவாக்கிய மண்ணில் இருக்கும் இளைஞர்கள் கிளர்ந்தெழுத்து கைப்பற்ற முன்வர வேண்டும் என தெரிவித்தர் பசீர் சேகுதாவுத்  தெரிவித்த கருத்துக்களின் காணொளி இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top