Saturday, February 28, 2015

உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காரவுக்கு 3 ஆம் இடம்

உலகக்கிண்ணப்  போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த
வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காரவுக்கு 3 ஆம் இடம்

அதிவேக சதம் எடுத்த அவர் சாதனையை அவரே முறியடித்தார்

உலகக்கிண்ணப்  போட்டிகளில் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 1258 ஓட்டங்களுடன் தற்போது குமார் சங்கக்கார (KUMAR SANGAKKARA), லாராவை (1225 ஓட்டங்கள்) பின்னுக்குத்தள்ளி 3ஆம் இடம் பிடித்தார். சச்சின் 2278 ஓட்டங்களுடன் முதலாம் இடத்திலும் , ரிக்கி பாண்டிங் 1743 ஓட்டங்களுடன் 2ஆம் இடத்திலும் இருக்கின்றனர்.

குமார் சங்கக்கார KUMAR SANGAKKARA அடுத்தடுத்து சதங்களை எடுத்துள்ளார். முதலில் 73 பந்துகளில் சதம் எடுத்து ஒருநாள் போட்டிகளில் அவர் அதிவேக சதம் கண்டார். இன்று இங்கிலாந்துக்கு எதிராக 70 பந்துகளில் சதம் கண்டு அவர் சாதனையை அவரே முறியடித்தார்.

பாகிஸ்தான் அணி பெரிதும் திணறிவருகிறது. 43 ஓவர்களில் 182/6

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015

பாகிஸ்தான் அணி பெரிதும் திணறிவருகிறது.
43 ஓவர்களில் 182/6

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் திணறி வருகிறது.
 பிரிஸ்பேனில் நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை (பி பிரிவு) எதிர்கொண்டுள்ளது.. இந்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாகும். தோல்வி விமர்சனத்தில் இருந்து விடுபட இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
பாகிஸ்தான் இன்றும் தனது தொடக்க ஆட்டக்காரர்களை ஒரு ஓட்டம் மட்டும் எடுத்திருந்தநிலையில் இழந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து விளையாடி வருகிறதுபாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர் நசீர் ஜாம்ஷெட் ஒரு ஓட்டத்திலும், ஷேசாத் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள். ஏற்கனவே இரண்டு தோல்விகளால் பெரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்களை இது மேலும் எரிச்சல் அடைய செய்துள்ளது.
43 ஓவர்களில் பாகிஸ்தான்  6 விக்கெட்டுக்களை இழந்து  180 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. மிஷ்பா உல் ஹக்  69 ஓட்டங்களுடனும், வஹாப் றியாஸ் 15 ஓட்டங்களுடனும் விளையாடி களத்தில் இருந்தனர்.

 பாகிஸ்தான் முதல் 10 ஓவர்களில் வெறும் 14 ஓட்டங்களை மட்டுமே எடுத்திருந்தது. கடந்த 2001ம் ஆண்டுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் முதல் 10 ஓவர்களில் பாகிஸ்தான் எடுத்த இரண்டாவது குறைந்த ஓட்டங்கள் இதுவாகும். பாகிஸ்தான் அணி பெரிதும் திணறிவருகிறது.


இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி (படங்கள்) புள்ளி விபரப் பட்டியல் இணைப்பு

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015

இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி (படங்கள்)

புள்ளி விபரப் பட்டியல் இணைப்பு

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில், இங்கிலாந்து -இலங்கை அணிகள் வெலிங்டனில் இன்று1 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை மோதின. இப்போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.2  ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 312 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
LAHIRU THIRIMANNE லாஹிறு திரிமன்னே 143 பந்துகளை எதிர்நோக்கி 2 சிக்ஸர்கள் 13 பவுண்டரிகள் அடங்களாக 139 ஓட்டங்களையும், KUMAR SANGAKKARA குமார் சங்கக்கார 86 பந்துகளை எதிர்நோக்கி 2 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் அடங்களாக 117 ஓட்டங்களையும், TILLAKARATNE DILSHAN தில்சான் திலகரத்ன 55 பந்துகளை எதிர்நோக்கி 2 சிக்ஸர்கள் 04 பவுண்டரிகள் அடங்களாக 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளிடம் தோல்வியைத் தழுவிய இங்கிலாந்து, தனது 3-ஆவது ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை வென்றது. மறுபுறம், இலங்கை அணியோ தனது முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் போராடி வென்றது. ஆனால், 3-ஆவது ஆட்டத்தில் வங்கதேசத்தை 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது.









"ஸ்மார்ட்போனில்' இசையை இரசிக்கும் இளைஞர்களின் கேட்கும் திறன் பறிபோகும் அபாயம்! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

"ஸ்மார்ட்போனில்' இசையை இரசிக்கும்
இளைஞர்களின் கேட்கும் திறன் பறிபோகும் அபாயம்!

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


காதுகளில் கேட்பொலிக் கருவிகளைப் பொருத்தி செல்லிடப்பேசிகள் மூலமாகவும், கேளிக்கைகளில் பெரிய ஒலிப் பெருக்கிகள் மூலமாகவும் அதிக ஒலியில் இசையை ரசிக்கும் வழக்கம் இளைஞர்களிடையே பெருகி வருவதால், 100 கோடி இளைஞர்களுக்கு கேட்கும் திறன் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:
அதிக வருவாய் கொண்ட நாடுகளிலுள்ள 12 முதல் 35 வயதுக்குள்பட்டவர்களில், சுமார் அரைவாசி எண்ணிக்கையுடையோர் "ஸ்மார்ட்போன்'கள் உள்ளிட்ட ஒலிச் சாதனங்களிலிருந்து கேட்பொலிக் கருவிகளைப் பயன்படுத்தி இசையை அதிக ஒலியுடன் ரசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் 40 சதவீதத்தினர் பொது அரங்குகளிலும், இரவு நேர கேளிக்கை விடுதிகளிலும் உரக்க ஒலிக்கும் இசையை ரசித்து வருகின்றனர்.

இளைஞர்கள் அளவுக்கு அதிகமான ஒலியைக் கேட்பதற்கான சூழல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவர்கள் கேட்கும் திறனை இழப்பதற்கான வாய்ப்பும் அதிகரித்து வருகிறது. அதிக ஒலியில் இசை கேட்டு, அதனால் கேட்கும் திறனை இழந்துவிட்டால் அதற்குப் பிறகு எப்போதுமே, எதையுமே கேட்க முடியாது என்பதை இளைஞர்கள் உணர வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 33/2

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 33/2

உலகக் கிண்ணக்கிரிக்கெட் போட்டியில் பிரிஸ்பேனில் இலங்கை நேரப்படி காலை 9 மணிக்கு ஆரம்பமான 23-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை (பி பிரிவு) எதிர்கொள்கிறது.
இதில் நாணயச் சுழற்சியில்  வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் உலக க் கிண்ணப் போட்டிகளில் இதற்கு முன்பு 5 தடவை சந்தித்துள்ளன. இதில் ஒருமுறை கூட ஜிம்பாப்வே அணி வெற்றி கண்டதில்லை. பாகிஸ்தான் அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. தற்போது நடைபெறும் உலகக் கிண்ண போட்டியில் இதுவரை இரண்டு ஆட்டத்தில் விளையாடிவுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு ஆட்டத்திலும் தோல்வி அடைந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றிப்பெற்றால் மட்டுமே அந்த அணி காலிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பதால் அந்த அணி வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே அணி ஒரு ஆட்டத்தில் வெற்றியும், 2 ஆட்டத்தில் தோல்வியும் அடைந்துள்ளது.  
பாகிஸ்தான் அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 33 ஓட்டங்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.




இந்திய வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டம்

இந்திய வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்கள்
புறக்கணிக்கப்படுவதாக சுலோகங்களுடன் ஆர்ப்பாட்டம்

இந்திய வீட்டுத் திட்டத்தில் யாழ்ப்பாணத்து. முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று செய்யப்பட்டிருக்கிறது.

அரசே! சொந்த மண்ணில் எங்களைக் குடியேற்று, 

பாரபட்சமற்ற நீதியான குடியேற்றம் வேண்டும்

1990.10.30 ல் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களுக்கு தனியான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து எங்களுக்கு நடந்த அநியாயங்களை விசாரியுங்கள், 

அரசே! 100 நாள் வேலைத்திட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்,

1990 – 1997 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் காணாமல் போன முஸ்லிம்களின் முடிவு என்ன? 

இந்திய வீட்டுத் திட்டத்தில் வட மாகாண முஸ்லிம்களுக்கு சதி,

இந்திய வீட்டுத் திட்டத்தில் காலத்தை இழுத்தடித்து இறுதியில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கழுத்தை அறுத்த பிரதேச செயலாளரே ஒழிக! 

என்ற வாசககங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியவர்கள் ஏந்தியிருந்தனர்.
படங்கள் - பா.சிகான்










ஐ. நா. சபையின், அரசியல் விவகாரத் திணைக்களத்தின் துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று சந்தித்தார்

ஐ. நா. சபையின், அரசியல் விவகாரத் திணைக்களத்தின்

துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன்
அமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று சந்தித்தார்


ஐக்கிய நாடுகள் சபையின், அரசியல் விவகாரத் திணைக்களத்தின் துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று 28 ஆம் திகதி சனிக்கிழமை மாலை அவரது இல்லத்தில் சந்தித்து இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்புகள் என்பன குறித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியும், மனிதாபிமான இணைப்பாளருமான சுபினே நண்டி, ஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைமை அதிகாரி மேரி யமஷிடா ஆகியோரும் பங்குபற்றினர்.



இந்தியா 9 விக்கெட்டுக்களால் ஹாட்ரிக் வெற்றி (புள்ளி விபரப் பட்டியல் இணைப்பு)

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015

இந்தியா 9 விக்கெட்டுக்களால் ஹாட்ரிக் வெற்றி

இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் தொடங்கிய நிலையில் நாணயற் சுழற்சியில்  வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு  செய்தது.
இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி  வீரர்கள் களமிறங்கி விளையாடினர். ஆட்டத் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். 31.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா,உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.SHAIMAN ANWAR சைமன் அன்வர் ஆகக் கூடுதலாக 35 ஓட்டங்களைப் பெற்றார்.

இதையடுத்து 103 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 104 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.



ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி
சகல விக்கெட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை பெற்றது




இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் தொடங்கியுள்ளது நாணயற் சுழற்சியில்  வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு  செய்தது.
இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி  வீரர்கள் களமிறங்கி விளையாடினர். ஆட்டத் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
31.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 102 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா,உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

SHAIMAN ANWAR சைமன் அன்வர் ஆகக் கூடுதலாக 35 ஓட்டங்களைப் பெற்றார். இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 103 ஓட்டங்களைப் பெறுவதற்காக விளையாடிக் கொண்டிருக்கிறது.

சட்டத்தணி ஆரிப் சம்சுதீன் முஸ்லிம் காங்கிரஸினால் முதன்மைபைப்படுத்தப்படுன்றாரா? அப்படியானால். . ??

சட்டத்தணி ஆரிப் சம்சுதீன்

முஸ்லிம் காங்கிரஸினால் முதன்மைபைப்படுத்தப்படுன்றாரா?

திகாமடுல்ல மாவட்டத்தில் நிலவும் கருத்து

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸில் இணைந்திருக்கும்   மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி  ஆரிப் சம்சுதீன் முஸ்லிம் காங்கிரஸினால் தற்போது முதன்மைபைப்படுத்தப்படும் ஒரு நபராக இருந்து வருகின்றார் என அறிவிக்கப்படுகின்றது. இது குறித்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளால் அதிகம் பேசப்படுவதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.
திகாமடுல்ல மாவட்டத்தில் குறிப்பாக கல்முனைத் தேர்தல் தொகுதியில் இவர் முதன்மைப்படுத்தப்படுகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆரிப் சம்சுதீன் ஒரு சிறந்த அரசியல் பின்னனியைக் கொண்டவர். ஆரிப் சம்சுதீனை சிறந்த அரசியல் வாதியாக நான் பார்க்கின்றேன். அவரது அரசியல் வாழ்வு மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்”.. இவ்வாறு கல்முனை மாநகர பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான .எல்.அப்துல் மஜீட் கூட அவரை புகழ்ந்து அவரின் எதிகால அரசியலுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கல்முனையில் இடம்பெற்றவாழ்வின் ஒளிவாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இப்படி குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவர் .எல்.அப்துல் மஜீட் , மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் பற்றி மேலும்  வாழ்த்திக் கூறுகையில்,
ஆரிப் சம்சுதீனை சிறந்த அரசியல் வாதியாக நான் பார்க்கின்றேன். அவரது அரசியல் வாழ்வு மேலும் மேலும் பிரகாசிக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்என்று .எல்.அப்துல் மஜீட் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் கல்முனைத் தேர்தல் தொகுதியை மையமாக வைத்து சட்டத்தரணி  ஆரிப் சம்சுதீன் முதன்மைப்படுத்தப்படுகின்றாரோ எனவும் அரசியல் அவதானிகள் கருத்துக்களை வெளியிடுகின்றனர்.
அப்படியானால். . .? ? ? ? 

Friday, February 27, 2015

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 19 ஓவர்கள் முடிவில் 51/5

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
19 ஓவர்கள் முடிவில் 51/5

இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் தொடங்கியுள்ளது நாணயற் சுழற்சியில்  வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துடுப்பாட்டத்தை தெரிவு  செய்தது.
இதையடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி  வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர். ஆட்டத் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துவிட்டது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 51 ஓட்டங்களை எடுத்துள்ளது.



ஆஸ்திரேலியாவை 1 விக்கெட்டால் வீழ்த்தியது நியூசிலாந்து (புள்ளி விபரப் பட்டியல் இணைப்பு)


உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி – 2015
ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியுள்ளது.
நாணயற் சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து களம் இறங்கியது. நியூசிலாந்து வீரர்களின் பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல், ஆஸ்திரேலிய அணி 32. 2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 151 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது.
இதனையடுத்து நியூசிலாந்து அணி 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
நியுசிலாந்து வீரர் மெக்குலம் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்து, அணியின் வெற்றியை எளிதாக்கினார். ஒரு பக்கம் வில்லியம்ஸ் நின்று ஆடினார். ஆனால், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால், நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் 152 ஓட்டங்களை எடுத்து வெற்றியை உறுதி செய்தது.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்த கல்வி மற்றும் காணி அமைச்சு வழங்கப்படாமல் ஏமாற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்த

கல்வி மற்றும் காணி அமைச்சு வழங்கப்படாமல் ஏமாற்றம்

தமிழ் மக்கள் கவலை

கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் நியமனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நடவடிக்கை காரணமாக தமிழ் மக்கள் கவலை அடைந்துள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்ப்புடன் இருந்த கல்வி மற்றும் காணி அமைச்சு அவர்களுக்கு வழங்கப்படாது ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த எம். ஐ.எம். மன்சூருக்கும் வழங்கப்பட்டிருப்பதே இந்த ஏமாற்றத்துக்குக் காரணமாகும்.
கிழக்கு மாகாண சபையின் கல்வி மற்றும் காணி அமைச்சை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதி கல்வி மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண அமைச்சர் பதவிகளுக்கு சீ.தண்டாயுதபாணி மற்றும் கே.துரைராஜசிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.    இதற்கமைய கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சீ. தண்டாயுத பாணியைக் கல்வி மற்றும் காணி அமைச்சராகவும், மாகாணசபை உறுப்பினர் கே.துரைராஜசிங்கத்தை விவசாய கால்நடை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச் சராகவும் நியமிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்திருந்தது.   இந்த நிலையில் நேற்றுக் கிழக்கு மாகாண கல்வி மற்றும் காணி அமைச்சராக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆரியவதி கலப்பதியும், வீதி அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் எம். ஐ.எம். மன்சூரும் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர்.    இவர்கள் இருவரும் நேற்றுக் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.   
இதேவேளை, கிழக்கு மாகாண சபையில் மீதமுள்ள விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய இரு அமைச்சுக்களும் தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்திருந்த கல்வி மற்றும் காணி அமைச்சு வழங்கப்படாமல் தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என கவலை வெளியிடப்பட்டிருக்கிறது.


பரவசத்துக்காக 30 நோயாளிகளை கொலை செய்த ஆண் தாதி!

பரவசத்துக்காக 30 நோயாளிகளை கொலை செய்த ஆண் தாதி

வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்றார்

ஜேர்மனியில் சம்பவம்





பரவசத்துக்காக 30 நோயாளிகளை கொலை செய்த ஆண் தாதி ஒருவருக்கு, வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
ஜெர்மனியில் டெல்மென்ஹாஸ்ட் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் தாதியாக 2003-2005 கால கட்டத்தில் பணியாற்றியவர், நீல்ஸ் (வயது 30). இவர் அந்த மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் வேலை செய்து வந்தார்.
இவர், மருத்துவமனையில் அங்குள்ள டாக்டர்கள் மனம் கவரும் விதத்தில் திறம்பட பணியாற்றி வந்துள்ளார். மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை பிழைக்கவைப்பதற்காக டாக்டர்கள் புத்துயிர் அளிக்கும் சிகிச்சை அளிக்கின்ற போது, அதை ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனித்து வந்திருக்கிறார். இளநிலை டாக்டர்களுக்கு அதில் உதவியும் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவருக்கு தானே இந்த சிகிச்சையை செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தது.
அதைத் தொடர்ந்து அவர் டாக்டராக மாறி, நோயாளிகளுக்குஅஜ்மலின்என்ற ஊசி மருந்தை இரகசியமாக செலுத்தி பரவசம் அடைந்து வந்திருக்கிறார். அந்த நோயாளிகளில் சிலர் காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர் இறந்தும் உள்ளனர். இந்த ஊசி மருந்து, ஆபத்தானது. டாக்டர்கள் மேற்பார்வையில் தான் செலுத்தப்பட வேண்டும். கண்டபடி இந்த ஊசி மருந்தை செலுத்தினால், அது நோயாளியின் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தும். ஆனால் நீல்ஸ், நோயாளிகளுக்கு இரகசியமாக இந்த ஊசி மருந்தை செலுத்தி விடுவாராம். இவ்வாறு அவர் 90 பேருக்கு ஊசி போட்டு 30 பேரை கொன்று விட்டார்.
அந்த மருத்துவமனையில் நோயாளிகள் அடுத்தடுத்து இறந்து வந்ததை அடுத்து, அவரை மருத்துவமனை நிர்வாகம் சந்தேகம் கொண்டு கவனித்து வந்து, அவரது செயல்பாடுகளைக் கண்டுபிடித்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஓல்டன்பர்க் மாவட்ட கோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டது.
முதலில் தன் மீதான குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்காமல் மெளனம் காத்து வந்த அவர் கடைசியில் கடந்த செப்டம்பர் மாதம் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். “நான் உண்மையிலேயே எனது செயலுக்காக வருத்தப்படுகிறேன்என அவர் அப்போது குறிப்பிட்டார்.
மேலும், “நோயாளிகளை கொல்ல வேண்டும் என்பது எனது நோக்கம் கிடையாது. நோயாளிகளுக்கு ஊசி போட்டு, புத்துயிர் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, என் சக ஊழியர்களை கவர வேண்டும் என்றுதான் இப்படி நடந்து கொண்டேன்என கூறினார்.
ஆனால் அவரது சக கைதிகளிடம் தான் 50 பேரை ஊசி போட்டு கொன்று விட்டதாக அவர் பெருமை பேசி உள்ளார். “50 பேரை கொன்ற பிறகு நான் என்னால் இறக்கிறவர்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதை நிறுத்தி விட்டேன். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் நான்தான் மிகப்பெரிய தொடர் கொலைகாரன்என கூறி உள்ளார். அவர்களும் நீதிமன்றத்தில் நீல்சுக்கு எதிராக சாட்சியம் அளித்தார்கள்.
முடிவில், நீல்சுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.