Monday, December 31, 2018

கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்களை இன்று முதல் பெற்றுகொள்ளலாம்’


கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின்
தரச்சான்றிதழ்களை
இன்று முதல் பெற்றுகொள்ளலாம்


கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சையின் தரச்சான்றிதழ்கள் இன்று 1 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக, பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம், சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வியை தொடருவதற்கமைய, இந்த தரச்சான்றிதழ்களை இன்று முதல் விநியோகிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த இந்த தரச்சான்றிதழ்களை ஒருநாள் சேவையின் மூலமாகவும் பெற்றுகொள்ள முடிவதோடு, இதற்காக 600 ரூபாய் கட்டணம் அறவிடப்படுமென்றும், மேலதிக பிரதி தேவைப்படின், அதற்கு 350 ரூபாய் கட்டணமும் அறவிடப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழை விழுங்கிய சீன மொழி



தமிழை விழுங்கிய  சீன மொழி



இலங்கையில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாட்டு,  அதிகாரபூர்வ மொழிகள், சமூக மேம்பாட்டு, இந்து கலாசார அமைச்சரான மனோ கணேசன் தனது டிவீட்டர் பக்கத்தில், இது தொடர்பான பதிவுகளை இட்டுள்ளார்.

இலங்கையில் சீனாவின் கட்டுமானத் தளங்களில், உள்ளூர் மொழி சட்டங்கள் மீறப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம். தேவைப்பட்டால், சீனத் தூதரகம் உள்ளிட்ட எல்லாத் தரப்புகளுடனும், பேசும் திட்டம் உள்ளது. இலங்கையின் உள்ளூர் சட்டங்களுக்கு சீனர்கள் மதிப்பளிக்க வேண்டும்.

கொழும்பு பெருநகர திடக்கழிவு முகாமைத்துவ திட்டப் பகுதியில், நாட்டப்பட்டுள்ள பலகை தொடர்பாக எமது அமைச்சு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.

அந்த பெயர்ப்பலகையில், சிங்களம், மண்டரின், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. எனினும் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் திட்டப் பகுதிகளில் பெயர்ப்பலகைககளில், ஆங்கிலம் மற்றும் மண்டரின் மொழிகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒன்று அல்லது இரண்டு உள்ளூர் மொழிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளனஎன்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் காஸ் கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி


ரஷியாவில் காஸ் கசிந்த விபத்தில்
4 பேர் பரிதாப பலி

   
ரஷியா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் இன்று திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு குழந்தைகள் ட்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.

தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.






2019 புத்தாண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு கவலையான ஒரு செய்தி!


2019 புத்தாண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு
கவலையான ஒரு செய்தி!



மலர்ந்திருக்கும் 2019 புத்தாண்டில் விடுமுறைகள் குறைந்த ஆண்டாக இந்த ஆண்டு காணப்படுகின்றது.

23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டு சனி, ஞாயிறு தினங்களில் வருவதுடன், வெசாக், பௌர்ணமி விடுமுறையும் சனி, ஞாயிறு தினங்களில் வருகின்றன.

பௌணமி தினங்கள், தீபாவளி பண்டிகை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட சில விடுமுறைகளும் ஞாயிறு தினங்களில்தான் வருகின்றன.  

20 வர்த்தக விடுமுறைகளில் எட்டு விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளது.

கடந்த ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்களில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க ஊழியர்களுக்கு இது ஒரு கவலையான செய்திதான்.


336 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு! வெளிநாட்டவர் இருவர் கைது


336 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!
வெளிநாட்டவர் இருவர் கைது

நாடு முழுவதும் விநியோகிக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 336 கோடி ரூபாய் பெறுமதியான 278 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக கல்கிஸ்ஸை பகுதியில் வீடொன்றை சுற்றிவளைத்து அங்கிருந்து 9 கிலோ ஹெரோயினுடன் பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது போதைப்பொருள் விநியோக மத்திய நிலையமாக செயற்பட்டு வந்த தெஹிவளை கெளடான பார அத்திட்டிய பகுதியிலுள்ள சொகுசு வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டது.

அங்கிருந்தும் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைதுசெய்த பொலிஸார் இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் தொகையான ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 7.5 கோடி பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் கடந்த 23ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் கடந்த 2013 ஆகஸ்ட் 31ம் திகதி ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவு மற்றும் பொலிஸ் போதைத்தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 261 கிலோ நிறையுடைய ஹெரோயின் தொகையே, இலங்கையில் மீட்கப்பட்ட அதிகூடிய தொகை கொண்ட போதைப்பொருளாக காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று மீட்கப்பட்ட 278 கிலோ நிறையுடைய 336 கோடி ரூபா பெறுமதிவாய்ந்த தொகையே இலங்கையிலிருந்து மீட்கப்பட்ட அதிகூடிய தொகையாக மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு வாரங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் பெண்மணி ஒருவர் 32 கிலோ ஹெரோயினுடன் இதே பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..





புது வருடத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மஹிந்தவுக்கு அனுப்பிய வாழ்த்து மடல்!


புது வருடத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி
மஹிந்தவுக்கு அனுப்பிய வாழ்த்து  மடல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு சீன ஜனாதிபதி Xi Jinping புத்தாண்டு வாழ்த்து மடல் அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கைக்கான சீன தூதுவர் Cheng Xueyuan குறித்த வாழ்த்து மடலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவிடம் கையளித்துள்ளார்.

இது குறித்து மஹிந்த ராஜபக்ஸ தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவொன்றை இட்டிருந்தார்.
இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸவுடன் சீனா நெருங்கிய உறவை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





வங்காளதேச பாராளுமன்ற தேர்தல் - மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசினா


வங்காளதேச பாராளுமன்ற தேர்தல்
- மீண்டும் பிரதமராகிறார் ஷேக் ஹசினா

   

வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கிறது.

வங்காளதேசத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாத கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது. வங்காளதேசத்தை பொறுத்தவரை பெரும்பான்மை இடங்களை பெற 151 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

அவாமி லீக் கட்சி 281 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மூன்றாவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசினா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபால்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட ஷேக் ஹசினா 2,29,539 வாக்குகளை பெற்று அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் வெறும் 123 வாக்குகளை வாங்கி படுதோல்வி அடைந்தார்.

இதற்கிடையே இந்த தேர்தலில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும், இது கேலிக்கூத்தானது என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர். எதிர்கட்சி மொத்தமாக ஏழு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ள நிலையில், பாரபட்சமின்றி மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

முன்னதாக தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறை மற்றும் மோதலில் 17 பேர் பலியாகியுள்ளனர். வன்முறைகள் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கே போனது உங்கள் கலாச்சாரம் ( விஜயா பாஸ்கரன் )


எங்கே போனது உங்கள் கலாச்சாரம்
( விஜயா பாஸ்கரன் )



திருகோணமலை சண்முகா பாடசாலையில் ஒரு இஸ்லாமிய ஆசிரியை அபாயா ஆடையோடு வந்தார் என்பதற்காக வீதியில் இறங்கிப் போராடிய கலாச்சாரப் பற்றாளர்களே இதோ உங்கள் கல்வி அமைச்சர் எப்படி வருகிறார் எனபதைப் பாருங்கள்.உங்களால் இவரை என்ன செய்ய முடியும்? உங்களது எதிர்பபை இங்கேயும் காட்ட முடியுமா?இவரும் வரட்டுத்தனமான சாதி வெறிபிடித்த சைவ இந்துப் பரம்பரைப் பெண்.

இஸ்லாமியர்,கிறிஸ்தவர் என்றால் பொங்கி எழுவீர்கள்.போராட்டம் நடத்துவீர்கள்.கிண்டலடிப்பீர்கள்.அதிகாரம்,பதவி,உங்களது சமூகம என்றால் வாயைப் பொத்துவீர்கள்.பிழைப்புவாத ஊடகங்கங்களே உங்கள் மௌனம் கலையுமா?

அன்றைக்கு ஆசிரியைக்களை இடம் மாற்றக் கோரினீர்கள்.இன்றைக்கு கல்வி அமைச்சரை மாற்றக் கோருவீரகளா? முடியுமா? இந்தக் கல்விஅமைச்சரை பாடசாலையில் இதே கோலத்தில் வந்தாலும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து மாலை போட்டுவரவேற்க நீங்கள் தயார்.ஆனால் ஒரு பண்பாட்டு உடையோடு இஸ்லாமிய ஆசிரியை வந்தால் எதிரப்பு.

எல்லாமே வேசம். எல்லாமே நடிப்பு. எல்லாமே பிழைப்பு.தமிழ்.இந்து,பண்பாடு என்அனஉமஅன் பெயரால் நடத்தும் கூத்துக்களை நிறுத்துங்கள்.மனிதரை மனிதராக மதியுங்கள்

இங்கே இவர் அணிந்த ஆடை பிரச்சினை அல்ல.அவர் நீச்சல் உடையிலும் வரலாம்.ஆனால் ஒரு இந்துக்கள் படிக்கும் பாடசாலையில் பெண் ஆசிரியர் இப்படித்தான் ஆடை அணிந்து வரவேண்டும் என போராட்டம் நடத்தியவர்கள் ஒரு கல்வி அமைச்சர் தமது கலாச்சாரத்துக்கு ஒவ்வாத ஆடை அணிந்து வருகிறார்.அவரை விமர்சனம் செய்ய எவருக்குமே துணிவு வரவில்லை.ஆனால் அடுத்த மத பெண்களின் பண்பாட்டு ஆடைகளுக்கு மட்டும் ஏன் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும்.

குறிப்பாக திருகோணமலை சண்முகா இந்து பெண்கள் பாடசாலையில் அபாயாவுக்கு எதிராக போராட்டம் நடாத்தியவர்கள்,ஆதரவளித்தவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.

உண்மையில் தமிழர்களுக்கு என்று கலாச்சார ஆடைகள், இல்லை.அவை இன்னொரு சமூகத்திலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை.அதனால்தான் இந்த ஆடைகளையும் ஏற்கிறார்கள்.அதேநேரம் நடிக்கிறார்கள்

இந்தப் பதிவு விஜயகலா பற்றியது அல்ல. தமிழ் கலாச்சார காப்பாளர்களைப் பற்றியது
Vijaya Baskaran

அட்டாளைச்சேனை பிரதேச சபை, நகர சபையாக தரமுயர்த்தப்படும் - இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்


அட்டாளைச்சேனை பிரதேச சபை,
நகர சபையாக தரமுயர்த்தப்படும்
- இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

அட்டாளைச்சேனை பிரதேச சபையை நகர சபையாக தரமுயர்த்தித் தருவதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் நேற்று 2018.12.30 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.


அம்பாறை மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள்


அம்பாறை மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்ற
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்கள்



வெளியான 2018 .பொ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி கணிதத் துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதலிடத்தை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முஹம்மத் சலீம் ஹினாஸ் அகமட் 3 பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.


சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட முஹம்மத் சலீம் ஹினாஸ் அகமட் ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.ஸி முஹம்மத் சலீம் அவர்களின்ஒரேயொரு மகனாவார். தந்தை முஹம்மத் சலீம் மரணித்து. 41ஆவது நாளில் அன்னாரின் மகனுக்கு  இந்தப் பெறுபேறு கிடைத்துள்ளது.

இதேவேளை, இவருடன் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவன் முகைதீன்பாவா றிசாட் முகம்மட் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் 02ஆம் இடத்தையும், மாவட்டத்தில் முதல் நிலையையும் பெற்று சாதனை படைத்துள்ளார்..


ஓய்வு பெற்ற ஆசிரியர் எம். வை.எம். அப்துல் காதர் வபாத்தானார்


ஓய்வு பெற்ற ஆசிரியர்
 எம். வை.எம். அப்துல் காதர்

வபாத்தானார் 



கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வீதியைச் சேர்ந்தவரும், கல்முனை மஹ்மூத் பெண்கள் கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆசிரியரும், பிரசித்த நொத்தாரிசுமான அல்ஹாஜ். எம். வை. எம். அப்துல் காதர் வபாத்தானார்.
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

கல்முனை ஸாஹிறாக் கல்லூரி முன்னாள் அதிபரான ஹாஜியானி சித்தி மர்ஜுனாவின் அன்புக் கணவரும், சித்தி மாஹிதா, யூசுப் றிகாஸ் (பொறியியலாளர்), றுஸ்தா பர்வின் ஆகியோரின் பாசமுள்ள தந்தையான இவர் முஹம்மத் முஸ்தாக், பிர்னாஸ் அஹமட், ஸீனத்துல் ஸஹ்னா ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா கொழும்பு, தெஹிவள, இல. 32/9,பாத்தியா மாவத்தை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால இலக்கு: மன்னார் மாணவி ரைஷா பர்வின்


சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே
எனது எதிர்கால இலக்கு:
மன்னார் மாணவி ரைஷா பர்வின்



2018ஆம் ஆண்டுக்கான .பொ. உயர்தர பரீட்சையின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் மாணவி உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் .ஆர்.ரைஷா பர்வின் என்ற மாணவியே மாவட்ட நிலையில் முதலிடத்தினையும், தேசிய ரீதியில் 666ஆம் இடத்தினையும் பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த மாணவி கருத்து தெரிவிக்கையில், சிறந்த மகப்பேற்று நிபுணராக வர வேண்டும் என்பதே எனது எதிர்கால இலட்சியம்.

எனது கல்வி செயற்பாட்டிற்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர்கள், அதிபர் மற்றும் நண்பர்கள் எல்லோருக்கும் மேலாக எல்லாம் வல்ல அல்லாஹ்வை நினைவில் கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்