Sunday, November 30, 2014

ஜனாதிபதித் தேர்தல் - 2015 அமைப்புகளின் பொது எதிரணி உடன்படிக்கை சற்றுமுன் ஆரம்பமானது. (படங்கள்)


ஜனாதிபதித் தேர்தல் - 2015
அமைப்புகளின் பொது எதிரணி உடன்படிக்கை
சற்றுமுன் ஆரம்பமானது. (படங்கள்)

ஜனாதிபதித் தேர்தல் -2015  அமைப்புகளின் பொது எதிரணி உடன்படிக்கை சற்றுமுன் ஆரம்பமானது.
நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை 100 நாட்களுக்குள் இல்லாதொழித்தல்.
மக்களுக்கு பொறுப்பு கூறும் புதிய பாராளுமன்ற முறைமையை ஏற்படுத்தல்
ஜனாதிபதி நாட்டின் தேசிய தலைவராக இருப்பதோடு தேவைக்கு ஏற்ப அதிகாரங்களும் பொறுப்புகளும் வழங்கப்படும்
ஜனாதிபதி பதவியை நாட்டின் சின்னமாக பிரகடனம் படுத்தல்
அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்தை இல்லாதொழித்தல்
நீதி சேவை, பொலிஸ் சேவை, தேர்தல் முறைமைகள் மற்றும் கணக்காய்வாளர் நிர்வாகம் ஆகியன சுயாதீனமாக செயற்பட வழிவகுத்தல்
விகிதாசார தேர்தல் முறைமையை இல்லாதொழித்து ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென ஓர் பாராளுமன்ற பிரதிநிதியை தெரிவு செய்யும் வகையில் பழைய பாராளுமன்ற தேர்தல் முறைமையை ஏற்படுத்தல்








Signing of the M.O.U by the leaders of politicle party's

சிறுபான்மை சட்டத்தரணிக்கு வழங்கப்பட்ட கெளரவம் மைத்ரீ ஒரு பதிவு- மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா


சிறுபான்மை சட்டத்தரணிக்கு வழங்கப்பட்ட கெளரவம்

மைத்ரீ ஒரு பதிவு
மாகாண சபை உறுப்பினர் றிஸ்வி ஜவஹர்ஷா



மைத்ரீ ஒரு பதிவு-
சில மாதங்களுக்கு முன்னர் .............சுகாதார அமைச்சரின் அலுவலகத்திலிருந்து அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு ஒரு அழைப்பு . ஒரு விஷேட வைபவம் குறித்த இடத்திற்கு குறித்த நேரத்திற்கு வருமாறு அந்த அழைப்பு சுகாதார அமைச்சர் மைத்ரீ இடம் இருந்து .

அனைவரும் வந்து சேர்ந்தனர். என்ன நிகழ்வு ஏன் அழைக்கப்பட்டோம்? அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டனர் . அமைச்சரின் தொலைப்‌பேசியில் இருந்து அமைச்சின் சிரேஷ்ட சட்ட ஆலோசகர் திருமதி Ahamed க்கு ஒரு அழைப்பு " வைபவத்திக்கு வரவில்லையா?" "இல்லை தனிப்பட்ட விடுமுறையில் இருக்கிறேன்" திருமதி. Ahamed பதில் கூறினார். " ஒரு 10 நிமிடம் வந்து விட்டு போக முடியுமா ?" அமைச்சரின் விநயமான வேண்டுகோள். அமைச்சரின் அழைப்பு. மறுக்க முடியவில்லை. Mrs. Ahamed கலந்து கொள்கிறார். வைபவம் ஆரம்பம். மைத்ரீ வெற்றிக்களிப்பில் ........ சிகரட் packet இல் புற்று நோய் எச்சரிக்கை படம் பிரசுரிப்பு போராட்டத்தில் பெற்ற வெற்றிக்காக ஐ. நா. இன் உலக சுகாதார அமைப்பினரால் வழங்கப்பட்ட விஷேட விருதுடன் கலந்து கொண்ட அமைச்சர் " இது எனது வெற்றியில்லை. உயர் நீதி மன்றம் வரை சென்று போராடி வெற்றியை கொண்டு வந்து சேர்த்த .திருமதி Ahamed அவர்கள் தான் இந்த விருதின் உண்மையான சொந்தக்காரர். எனவே இந்த விருதை நான் திருமதி ahamed அவர்களுக்கு வழங்குகிறேன் என்று அந்த சர்வதேச விருதினை ஒரு சிறுபான்மை சட்டத்தரணிக்கு உயர் அதிகாரிகளின் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் வழங்கி கௌரவித்தார்.ஆதாரத்துடன் Rizvi jawharsha.

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மீதான ஊழல் வழக்கு விசாரிக்கலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா
மீதான ஊழல் வழக்கு விசாரிக்கலாம்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மீதான ஊழல் வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வு நிராகரித்தது.
முன்னதாக, சிறப்பு விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கக் கூடாது என்று அவரது கோரிக்கையை, உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதை எதிர்த்து காலிதா ஜியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இப்போது உச்ச நீதிமன்றமும் இந்த மனுவை நிராகரித்ததையடுத்து, டாக்கா நகர சிறப்பு நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும்.
இதன் பின்னணி: காலிதா ஜியாவின் கணவர் முன்னாள் அதிபர் ஜியாவுர் ரகுமான் பெயரிலான இரு தொண்டு நிறுவனங்கள், பெயரளவில்தான் இயங்கி வந்தன. ஜியா அறக்கட்டளையிலிருந்து சுமார் ரூ. 2.4 கோடியை அவர் கையாடல் செய்தார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜியாவுர் ரகுமான் பெயரில் இயங்கும் அநாதைக் குழந்தைகள் பராமரிப்புக்கான அறக்கட்டளையின் கணக்கிலிருந்து, ரூ. 1.66 கோடி கையாடல் செய்ததாக வேறொரு குற்றச்சாட்டும் காலிதா ஜியா மீது சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் அவரது மூத்த மகன் தாரிக் ரகுமான் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2001-2006 ஆண்டுகளில் காலிதா ஜியா பிரதமராக இருந்தபோது, இந்த முறைகேடுகள் நடந்துள்ளன.
காலிதா ஜியா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால், அவருக்கு அதிகபட்சமாக, ஆயுள் சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் ஒரு வார கால அவகாசம்


முஸ்லிம் காங்கிரஸின்
ஒரு வார கால அவகாசம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.   ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவினை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சில கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.    இதன் போது கடந்த கால தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  
இந்த சந்திப்பின் போது அமைச்சர்களான அனுரபிரியதர்சன யாப்பாபசில் ராஜபக்ஸ, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட ஆளும் கட்சி முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர் என முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.  
முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்தில் தீர்வு வழங்கப்படும் எனவும், அமைச்சர்கள் இந்த கோரிக்கைகள் குறித்து கவனம் செலுத்துவார்கள் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸஉறுதியளித்தார் என ஹஸன் அலி குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்திப்பின்போது கல்முனை மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் கலந்து கொண்டார். இவர் ஜனாதிபதியின் சந்திப்பின்போது நீல நிறச் சேர்ட் அணிந்து கொண்டு சென்றிருந்தார்.
இவர்கள் மூவரும்  ஜனாதிபதியைப் பார்த்து அழகாக சிரிப்பதைப் பார்க்கும்போது  முஸ்லிம் சமூகத்திற்கான கோரிக்கைகளை சரியாக முன் வைத்திருப்பார்களா? கடந்த காலத்தில் முஸ்லிம்களுக்கும் பள்ளிவாசல்களிலும் இடம்பெற்ற மறக்கமுடியாத கசப்பான சம்பவங்களையும் நிச்சயமாக எடுத்துக் கூறியிருப்பார்களா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஜனாதிபதி சந்தித்துப் பேச்சு



சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான குழுவினருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று மாலை முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகமும் எம்.பியுமான எம்.ரி ஹஸன் அலி மற்றும் கல்முனை மேயர் நிஸாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஜனாதிபதியுடன், அமைச்சர்களான அநுர பிரியதர்சன யாப்பா, பசில் ராஜபக்ஸ மற்றும் டலஸ் அழகபெரும ஆகியோரும் பங்கேற்றனர்.

யாரை ஏமாற்றுகிறார்கள்? மக்கள் கேள்வி! முஸ்லிம் அரசியல்வாதிகளே சிந்தியுங்கள்!!

யாரை ஏமாற்றுகிறார்கள்?

மக்கள் கேள்வி

நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டத்தில் 20 மாவட்டங்களில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் 5 தமிழ் இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் எவருமில்லை

 முஸ்லிம் அரசியல்வாதிகளே சிந்தியுங்கள்.


அம்பாறை மாவட்டத்தில் கரையோர மக்களின் நன்மைகருதி(?) மேலதிக அரச அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் இவர் டிசம்பர் முதலாம் திகதி தொடக்கம் நிந்தவூர் பிரதேச செயலகக் கட்டடத்தில் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சுனாமி காலத்தில் கரையோரப்பிரதேச மக்களின் நன்மைக்கு எனக்கூறி மேலதிக அரச அதிபராக யூ.எல்.ஏ.அஸீஸ் நியமிக்கப்பட்டிருந்தார். இவருக்கு கல்முனை பொது நூலகத்தில் அலுவலகமும் வழங்கப்பட்டது.
கரையோரப் பிரதேச மக்களுக்கு  எதுவித சேவையும் வழங்க முடியாத நிலையில் எதுவித அதிகாரமும் வழங்கப்படாமல் அந்த அலுவலகம் இரவோடு இரவாக இல்லாமல் போனது சரித்திரமாகும். அது போன்றுதான் இந்த மேலதிக அரச அதிபர் பதவியும்  அலுவலகமும் தேர்தலின் பின்னர் இல்லாமல் போய்விடும் என மக்கள் கருதுகின்றார்கள்.
அதேநேரம் அம்பாறைக் கச்சேரியில் மேலதிக அரச அதிபராகக் தற்போது கடமை புரியும் மூப்புரிமைப் பட்டியலில் 189 வது இடத்தில் இருக்கும் கே.விமலநாதன் மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில்  மூப்புரிமைப் பட்டியல் அடிப்படையில் 130 வது இடத்தில்  இருக்கும் எம் ஐ. அமீர் அவரின் கீழ் கடமை செய்ய முன்வருவாரா?  என்ற கேள்வியும் உள்ளது.
நாட்டிலுள்ள 25 நிர்வாக மாவட்டத்தில் 20 மாவட்டங்களில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் 5 தமிழ் இனத்தைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இன விகிதாசாரப்படி பார்த்தாலும் முஸ்லிம் இனத்தவர்களில் குறைந்தது 2 பேராவது நாட்டில் எப்பகுதியிலாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதாவது 75 சதவீதம் வாழ்கின்ற சிங்களவர்களுக்கு 19 பேரும் 16 சதவீதம் வாழ்கின்ற தமிழர்களுக்கு 04 பேரும் 9 சதவீதம் வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு 02 பேரும் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் எவரும் மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுகின்றார்கள் இல்லை. இதனை எமது அரசியல் தலைவர்கள் கணக்கில் எடுப்பதாகவும் இல்லை. பின்வரும் தகவல்களைப் பார்த்தாவது எமது முஸ்லிம் தலைமைகள் நடவடிக்கை எடுப்பார்களா? குறைந்தது 2 முஸ்லிம்களாவது மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படுவார்களா?.
2014.10.10 ஆம் திகதி அரசாங்க நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ள இலங்கை நிர்வாக சேவையில் விசேட தரத்தில் மூப்புரிமைப் பட்டியல் அடிப்படையில் பின்வரும் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மூப்புரிமை இலக்கம்                 பெயர்
11                               எம்.ஐ.எம் றபீக்
30                               எஸ்.எம்.முஹம்மத்
75                               ஏ.அப்துல் மஜீத்
130                              எம் ஐ.அமீர்
158                              யூ.எல்.ஏ.அஸீஸ்
184                               எம்.ஏ.தஜுதீன்
187                               ஏ.மன்சூர்
190                                ஏ.எச்.எம்.அன்ஸார்
207                                ஆர்.யூ.அப்துல் ஜலீல்
208                                ஐ.எம்.ஹனிபா
226                                ஏ.சி.எம்.நபீல்
277                                எம்.அப்துல் அல்லம்
280                                 எம்.எச் முயுனுதீன்
283                                 எம்.எம்.முஹம்மத்
316                                 ஏ.எல்.முஹம்மது சலீம்
இந்நிலையில் 5 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள 5 தமிழ் மாவட்டச் செயலாளர்கள் மூப்புரிமை அடிப்படையில் வருமாறு,
182                    என் வேதநாயகம்   (முல்லைத்தீவு)
228                     பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் (மட்டக்களப்பு)
244                     எஸ்.அருமைநாயகம் (யாழ்ப்பாணம்)
248                     ஆர்.கீதீஸ்வரன்    (கிளிநொச்சி)
274                      ஆ.பதிநாதன்    (மொனராகலை)

மைத்திரியின் கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது


மைத்திரியின் கன்னிக் கூட்டம்

பொலன்னறுவையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது


பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   

பொலன்னறுவை 28 ஆவது மைல்கல் பிரதேசத்தில் பிற்பகல் 2 மணிக்கு  இக்கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுகிறது









Saturday, November 29, 2014

சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு!


சாய்ந்தமருது பைதுஸ் ஸக்காத் நிதியத்தின்
வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு!

43 குடும்பந்தினருக்கு 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும்
 118 நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் 17 ஆவது வருடாந்த ஸக்காத் விநியோக நிகழ்வு  29 ஆம் திகதி சனிக்கிழமை சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
பைதுஸ் ஸக்காத் நிதியத் தலைவர் மௌலவி யூ.எல்.எம்.காசிம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் மௌலவி எம்..அப்துல் காதர் (மிஸ்பாஹி) பிரதம பேச்சாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது-மளிகைக்காடு  பள்ளிவாசல்களின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா, செயலாளர் எம். ஐ. அப்துல் மஜீத், பைதுஸ் ஸக்காத் நிதியத்தின் பணிப்பாளர் எம்.எம்.இப்ராஹிம், செயலாளர் யூ.எல்.எம்.ஜவ்பர், எம்.எம்.இஸ்மாயில்  உட்பட உலமாக்கள், மரைக்காயர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு 43 குடும்பந்தினருக்கு 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் 118 நெல் மூடைகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.








நேபாள நாட்டு கோவில் விழாவில் 5 ஆயிரம் எருமை மாடுகள் பலி


நேபாள நாட்டு கோவில் விழாவில்
5 ஆயிரம் எருமை மாடுகள் பலி

நேபாள நாட்டில் பாரா மாவட்டம், பரியார்புர் கிராமத்தில் காதிமய் என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் விழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் நேபாள பக்தர்கள் மட்டுமின்றி, இந்தியாவில் இருந்தும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கூடுவார்கள். விழாவில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் மற்றும் பறவைகளை பலி கொடுப்பது வழக்கம்.
அதன்படி கடந்த 2 நாட்களாக அங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமை மாடுகள் பலி கொடுக்கப்பட்டன. அதோடு ஆயிரக்கணக்கான ஆடுகள், பன்றிகள், கோழிகளும் பலி கொடுக்கப்பட்டன என அறிவிக்கப்படுகின்றது. இந்த பலிக்கு இந்திய பகுதியில் இருந்தும் எருமைகள், ஆடுகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால் இதற்கு சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தடை விதித்தது. இந்த விழாவுக்கு பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தான் உலகிலேயே மிகப்பெரிய பலி கொடுக்கும் விழா என்று கருதப்படுகிறது. விழா அமைப்பாளர்கள் இது பாரம்பரியமாகவும், முன்னோர்கள் வழக்கப்படியும் நடைபெறுகிறது. இந்த பலி அம்மனை சாந்தப்படுத்துவதாக நம்புவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.




அமைச்சர் நவீன் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு முடிவு அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாகவும் தகவல்?



அமைச்சர் நவீன் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு முடிவு

அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாகவும் தகவல்?

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சரான நவீன் திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர், எதிரணியின் பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எதிரணியுடன் நாளை திங்கள்கிழமை உத்தியோகபூர்வமாக இணைந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின் முதலாவது பகிரங்க கூட்டம் இன்று பொலன்னறுவையில்


பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரியின்

முதலாவது பகிரங்க கூட்டம் இன்று பொலன்னறுவையில்


பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான கன்னிக் கூட்டம் பொலன்னறுவையில் இன்று 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கென பிரமாண்டமான முறையில் மேடை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான இடவசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவை 28ஆவது மைல்கல் பிரதேசத்தில் பிற்பகல் 2மணிக்கு  இக்கூட்டம் இடம்பெறவுள்ளது

பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர் காலித் மக்மூத் சூம்ரோ சுட்டுக்கொலை



பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர்

காலித் மக்மூத் சூம்ரோ சுட்டுக்கொலை


பாகிஸ்தானில் மூத்த அரசியல் தலைவர் காலித் மக்மூத் சூம்ரோ நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார் என அறிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் ஜாமியத் உலமா இஸ்லாம் (பாஜி) கட்சியின் மூத்த தலைவராக திகழ்ந்தவர் டாக்டர் காலித் மக்மூத் சூம்ரோ. சிந்து மாகாணத்தின், லர்கானா பகுதியை சேர்ந்த இவர், 2006-12 காலகட்டத்தில் பாகிஸ்தான் பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார். சன்னி பிரிவின் முக்கிய தலைவராகவும் விளங்கினார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கராச்சியில் இருந்து 500 கி.மீ. தொலைவில் உள்ள சுக்குர் என்ற இடத்தில் ஒரு மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் அங்குள்ள மசூதி ஒன்றுக்கு சென்று தொழுகை நடத்தி முடித்து விட்டு வெளியே வந்தார். அப்போது அந்த மசூதி வளாகத்துக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 2 ஆசாமிகள் அவர் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அவர் இரத்த வெள்ளத்தில் சாய்ந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதல் நடத்திய ஆசாமிகள் கண் இமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்து தப்பிவிட்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சம்பவம் குறித்து, அந்த பகுதியின் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தன்வீர் ஹுஸைன், செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில், “ஆயுதம் தாங்கிய 2 ஆசாமிகள் மசூதி வளாகத்துக்குள் புகுந்து, 11 முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் 4 குண்டுகள் காலித் சூம்ரோவை தாக்கி உள்ளன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலி ஆனார்என்று தெரிவித்துள்ளார்.


நாற்காலிக்குச் சண்டை போட்ட முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி சேர்.. சேர் எனக்கு டிப்பியுட்டி மினிஸ்டர் போஸ்ட் வேணும்!


நாற்காலிக்குச்சண்டைபோட்டமுஸ்லிம்காங்கிரஸ்எம்பி

சேர்.. சேர் எனக்கு டிப்பியுட்டி மினிஸ்டர் போஸ்ட் வேணும்!

(நாடாளுமன்ற எம்பிக்களான திகாம்பரமும் பிரபா கணேசனும்

 பிரதியமைச்சர்களாக பதவியேற்ற காலப் பகுதிகளில் இடம்பெற்ற ஒரு சம்பவம்



திருகோணமலை மாவட்ட எம். பி தௌபீக்: - (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) சேர்.. சேர் நம்மட கட்சிக்கும் ஜனாதிபதி டிப்பியுட்டி மினிஸ்டர் போஸ்ட்களை தரவிருக்கிறார். என்னை டிப்பியுட்டி மினிஸ்டர் ஆக்குங்களேன். சேர்.
அமைச்சர் ஹக்கீம் : - அம்பாறை மாவட்ட எம்.பி ஹரீஸுக்கு கொடுக்க வேண்டுமல்லவா? அதுவும் இப்போது டிப்பியுட்டி மினிஸ்டர் போஸ்ட் பெற்றுக் கொள்வது சரியும் இல்லை. நீங்கள் ஹரீஸ் எம்.பியைச் சந்தித்து முடிவைக் கூறுங்கள்.
திருகோணமலை மாவட்ட எம். பி தௌபீக்: - (ஹரீஸ் எம்.பியைச் சந்திந்த போது) தலைவரிடம் டிப்பியுட்டி மினிஸ்டர் போஸ்ட் கேட்டேன். உங்களது நிலைப்பாட்டை அறிந்து கூறச் சொன்னார். நான் அந்தப் போஸ்டை எடுத்துக் கொள்ளவா?
ஹரீஸ் எம்.பி டிப்பியுட்டி:- மினிஸ்டைர் போஸ்டா இப்போது அதனையெல்லாம் பெற்றுக் கொள்ள நான் தயாராக இல்லை. அதேபோல் நீங்களும் பெறவேண்டாம். அவ்வாறு செய்தால் நமது கட்சியின் அரசியல் களநிலை அஸ்தமனமாகி விடும். மக்கள் கூட எம்மை வெறுப்பார்கள்..
திருகோணமலை மாவட்ட எம். பி தௌபீக்: - அப்டியா...?
.எச்.சித்தீக் காரியப்பர்