சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில்
தேசிய கீதம் இசைக்கப்படாது
சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்படும்
சுதந்திர தின நிகழ்வில் இம்முறை தமிழ்
மொழியில் தேசிய
கீதம் இசைக்கப்படாது
என்றும், சிங்கள
மொழியில் மாத்திரமே
பாடப்படும் என்றும் கோத்தாபய ராஜபக்ச அரசாங்கம்
அறிவித்துள்ளது.
இலங்கையின்
72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வரும் 2020 பெப்ரவரி
4ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில்
பெருமெடுப்பில் இடம்பெறும் என அனர்த்த முகாமைத்துவ,
உள்நாட்டு விவகார,
மாகாணசபைகள் அமைச்சில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக்
கூட்டத்திலேயே, சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய
கீதம் இசைக்கப்படும்
என்று தீர்மானிக்கப்பட்டதாக பொதுநிர்வாக
அமைச்சர் ஜனக
பண்டார தென்னக்
கோன் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்குப் பின்னர், தமிழ்மொழியிலும
தேசிய கீதம்
பாடப்பட்டு வந்தது. எனினும் இம்முறை தமிழில்
தேசிய கீதம்
பாடுவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது,
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.