தற்கொலை செய்துகொண்ட ரீல் தோனி
– அதிர்ச்சியில் பாலிவுட்!
கிரிக்கெட்
அணியின் முன்னாள்
கேப்டன் தோனியின்
வாழ்க்கை வரலாற்று
படமான “M.S. Dhoni: The Untold Story” படத்தில் நடித்திருந்த
பாலிவுட் நடிகர்
சுஷாந்த் சிங்
ராஜ்புட் தற்கொலை
செய்துகொண்டுள்ளார்.
கை போ சே என்ற இந்தி படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
அவருக்கு
வயது 34. மும்பை
பாந்த்ரா பகுதியில்
அமைந்துள்ள அவரது இல்லத்தில் சுஷாந்த் சிங்
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த்
சிங்கின் இந்த
திடீர் மரணம்
பாலிவுட் திரையுலகில்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலைக்கான காரணம்
இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து பொலிஸார் அப்பகுதியில்
விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் மும்பையில் சுஷாந்தின் மானேஜர் திஷா சாலியன் தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 14 வது மாடி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்துகொண்டார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார்.
அதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட்டுக்கு இது மோசமான காலம் போல் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி பிரபல நடிகர் இர்பான் கான் மரணமடைந்தார். அதற்கு அடுத்த நாளே, பிரபல நடிகர் ரிஷி கபூர் இறந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இளம் இசை அமைப்பாளர் வாஜித் கான் மரணமடைந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.