கல்முனை கோயில் வீதியில் ஏற்பட்ட
திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து நாசம்
கல்முனை
கோயில் வீதியில்
உள்ள தனியார்
பல்பொருள் அங்காடியில்
ஏற்பட்ட திடீர்
தீ விபத்தில்
கடை முற்றாக
எரிந்து சாம்பலாகியுள்ளது.
குறித்த
தீ விபத்து
இன்று மாலை
3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள்
தெரிவிக்கின்றனர்.
சம்பவம்
தொடர்பில் தகவல்
கிடைத்த நிலையில்
ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸார் மற்றும்
கல்முனை மாநகரசபையின்
தீயணைப்பு படையினர்,
பொது மக்களுடன்
இணைந்து தீயை
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
சுமார்
1 மணி நேரத்தின்
பின் தீவிர
முயற்சி காரணமாக
தீ மேலும்
பரவாமல் முழுமையான
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
குறித்த
தீ விபத்து
மின் ஒழுக்கு
காரணமாக ஏற்பட்டதா
அல்லது நாசகார
செயற்பாட்டுடன் தொடர்புடையதா என பொலிஸார் விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.