திகாமடுல்ல மாவட்ட மக்களைச் சந்தித்துவரும்
தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம்

2020 பொதுத் தேர்தல் தேசிய காங்கிரஸ் சார்பான திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான .எல்.எம்.சலீம் தற்போது திகாமடுல்ல மாவட்ட மக்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.

இதனடிப்படையில் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் மீனவப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பினர், இளைஞர்கள் அமைப்பினர், வர்த்தக அமைப்பினர் போன்றோரை சந்தித்து பிரச்சினைகளைக் கேட்டறிவதுடன் இது தொடர்பாகவும் கலந்துரையாடிவருகின்றார்.

சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் அம்பாறை மாவட்ட மீன்பிடி சமாசங்களின் சம்மேளன தலைவர் ..றஹீம் பங்குபற்றுதலுடன் வேட்பாளர் ஏ.எல்.எம்.சலீம் அவர்களுடன் இடம்பெற்ற ஒரு சந்திப்பில் சாய்ந்தமருது மத்திய கிராமிய கடற்தொழில் அமைப்பின் பல பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின்போது, இப்பிராந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் மீனவர் வீடமைப்பு திட்டம், ஐஸ் தொழிற்சாலை, மீன் களஞ்சியசாலை, படகுத்துறை, மீனவர் தொலைத்தொடர்பு நிலையம், மீன்பிடியின்போது படகுகள் காணாமல் போகுமிடத்து அதனை மீட்டெடுத்தல் போன்ற விடயங்கள் மீனவர்களால் முன்வைக்கப்பட்டு அது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்து உரிய தீர்வுகளை பெற நடவடிக்கை எடுப்பதாக வேட்பாளர் சலீம் மீனவர்களிடம் தெரிவித்தார்.












0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top