சஜித்திற்கு அருகிலிருந்து
ஹிருணிக்காவை
வெளியேற்றினாரா
ஜலனி பிரேமதாஸ?
ஐக்கிய
மக்கள் சக்தி
கட்சியின் தலைவர்
சஜித் பிரேமதாஸவின்
மனைவி ஜலனி
பிரேமதாஸ தன்னை
கண்டுக்கொள்ளாமல் செல்லவில்லை என ஹிருணிக்கா பிரேமசந்திர
தெரிவித்துள்ளார்.
கொழும்பு
மாவட்ட ஐக்கிய
மக்கள் சக்தி
வேட்பாளரான தனக்கு அமர வேண்டிய இடத்தை
ஜலனி பிரேமதாஸ
காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித்
கூட்டத்திலிருந்து ஹிருணிக்காவை, அவரின்
மனைவி வெளியேற்றியதாக
தகவல்கள் வெளியாகி
இருந்தன.
ஐக்கிய
மக்கள் சக்தி
கட்சியின் பெண்கள்
முன்னணியை ஆரம்பிக்கும்
கூட்டத்தில் ஹிருணிக்காவை வெளியேற்றுவதனை
போன்ற புகைப்படம்
ஒன்று இணையத்தில்
வெளியாகியது.
எனினும்
ஒருபோதும் ஜலனி
பிரேமதாஸ தன்னை
ஆசனத்தில் இருந்து
வெளியேறுமாறு கூறவில்லை என ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இந்த
புகைப்படத்தின் அடிப்படையில் போலியான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது.
அவை உண்மையில்லை
என ஹிருணிக்கா
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.