நாடாளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும்
இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஏ.எல்.எம் அதாஉல்லாஹ் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எமது சமூகத்தின் பிரச்சினைகள் எதிர்காலத்தில் சேதாரமில்லாமல் தீர்க்கப்பட வேண்டும். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமால் ஒருபோதும் விழிக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை தயாரிக்கும் இயந்திரமாக முஸ்லிம் காங்கிரஸ் மாற்றப்பட்டுள்ளது. இதுவே உண்மையாகும்.
தலைவன் என்பவன் மக்களை வீதியில் நிறுத்துபவன் அல்ல, தீர்வை பெற்று கொடுப்பவரே ஆவார்.நான் நாடாளுமன்றம் செல்ல வேண்டும் என்றால் முஸ்லிம் காங்கிரஸில் இருந்திருக்க முடியும்.
1989 நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் தலைமையில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற போராடி ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றோம். அதே நிலையில் தலைவரது வழியில் தேசிய காங்கிரஸ் இரண்டாம் கட்டம் என்பதனை ஞாபகப்படுத்துகிறது.
அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களிடம் இருக்கும் வாக்கு பலத்தை பயன்படுத்தினால் நான்கு ஆசனத்தை பெறலாம். இதை நான் சொன்னால் பைத்தியம் என்பார்கள். களத்திலே முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரில் ரவூப் ஹக்கீம் தொலைபேசி சின்னத்தில் வருகின்றார். கூடவே பால் போத்தல் சஜித் பிரேமதாவையும் கூட்டி கொண்டு வருகிறார்.
ஹக்கீம் பிரதேச வாதத்தை தூண்டவைத்தார். அதன் வெளிப்பாடுதான் சாய்ந்தமருது, கல்முனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று என பிரித்தாலும் தந்திரங்கள் என்றும் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.