சாய்ந்தமருதின் அரசியல்
தலைமைத்துவத்தை பொறுப்பேற்க
ஏ.எல்.எம்.சலீம் முன்வர வேண்டும்
- ஏ.எம்.ஜெமீல் அன்று விடுத்த வேண்டுகோள்
சாய்ந்தமருது பிரதேசத்தின் அரசியல் தலைமைத்துவத்தை பொறுப்பேற்க, பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் முன்வர வேண்டும் என அன்று அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமாக இருந்தவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் வேண்டுகோள் ஒன்றை 2016 ஆம் ஆண்டு ம மாதம் விடுத்திருந்தார்.
சாய்ந்தமருது செஸ்ரோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த 'மருதின் விழுதுகள்' கௌரவிப்பு பெருவிழா 2016 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஏ.எம்.ஜெமீல் இவ்வாறு கூறியிருந்தார்.
குறித்த நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில், அமைப்பின் தலைவரும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தருமான எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்றது.
கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அன்று மேலும் உரையாற்றுகையில்,
“சாய்ந்தமருது பிரதேசத்திற்கு இன்று பல வகையிலும் அநீதிகள் இழைக்கப்பட்டு வருகின்றன. அரசியல் தலைமைகளினால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றன. அற்ப சலுகைகளுக்காக ஊரைக் காட்டிக் கொடுக்கின்ற செயற்பாடுகள் நிறையவே இடம்பெற்று வருகின்றன.
இந்த அபாயகரமான சூழ்நிலையில் இருந்து ஊரையும் மக்களையும் பாதுகாப்பதற்கு பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் ஊரின் அரசியல் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்க முன்வர வேண்டும். அதற்கு இப்பிரதேசத்தின் கல்வியியலாளர்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க தயாராக வேண்டும்.
தாமும் தம் தொழிலும் என்று இருந்து விடக் கூடாது. ஊரின் முன்னேற்றத்தில் பிரதேச செயலாளர் எவ்வாறு மிகவும் கரிசனையுடன் தன்னை முழுமையாக அர்ப்பணித்து சேவையாற்றுகின்றாரோ அவ்வாறு அனைத்து அரச சேவை அதிகாரிகளும் பணியாற்ற முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்ததுடன் பிரதமராக இருந்த ரணில் தெரிவித்த
தகவல் ஒன்றையும் இங்கு வெளியிட்டார்.
ஏ.எம்.ஜெமீல் அன்று வெளியிட்ட தகவல் வருமாறு,
கல்முனை நகர அபிவிருத்தி பற்றி தெரியாதாம்!
மேடையில் வைத்து ரவுப் ஹக்கீம் எழுதி தந்ததை வாசித்தேன்
இப்படிக் கூறினாராம் பிரதமர்
ஹக்கீமும் ,ஹரீஸும் சாய்ந்தமருதுக்கு எதிரிகள் என்றும்
அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின்
தலைவராக அன்று பதவி வகித்த ஜெமீல் குற்றச்சாட்டு
சாய்ந்தமருதுக்கு கிடைக்கவுள்ள உள்ளூராட்சி மன்றத்தை தடுப்பவர்கள் ஹக்கீமும், ஹரீஸும்தான்.
இது குறித்து ஜெமீல் மேலும் தெரிவிக்கையில்,
எனது நெருக்கமான நண்பர் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவரை நானும் அமைச்சர் றிஷாத் பதியுதீனும் சந்தித்து சாய்ந்தமருது நகர சபை தொடர்பாக கதைத்த போதே அவர்தான் இவர்கள் இருவரும் தடுக்கின்றனர் என கூறினார்.
அது மட்டுமன்றி நானும் அமைச்சரும் பிரதமரை சந்தித்து கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக நீங்கள் கல்முனையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு வாக்குறுதி வழங்கினீர்கள் இன்னும் அது நடை பெறவில்லை என கேட்ட போது எனக்கு அதைப் பற்றி தெரியாது மேடையில் வைத்து ரவுப் ஹக்கீம் எழுதி தந்ததை வாசித்தேன் என்று தெரிவித்ததாகவும் ஜெமீல் அன்று அங்கு குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.