அம்பாறை மாவட்ட மக்களின் கவனத்திற்கு
ஆண்கள் இல்லாத நேரத்தில் பெண்களை ஏமாற்றி
பணம் பெற்றுச் செல்லும் ஏமாற்றுக்காரன்


அம்பாறை மாவட்டத்தில் தன்னை நிந்தவூர் எனக் கூறிக்கொண்டு  வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் ஒரு ஏமாற்றுக்காரன் பெண்களிடம் தான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டதாகவும் உங்கள் வீட்டுக்காரரை எனக்கு நன்கு தெரியும் நாளை பணத்தைக் கொண்டுவந்து தருகின்றேன் என அழாத குறையாகக் கூறி பணத்தை வாங்கிக் கொண்டு செல்லும் ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த ஏமாற்றுக்காரனின் ஏமாற்று நடவடிக்கை குறித்து அம்பாறை மாவட்ட மக்கள் குறிப்பாக வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.
இந்த ஏமாற்றுக்காரன் வீட்டில் உள்ள குடும்பத் தலைவன் வெளியில் செல்வதை அவதானித்துக்கொண்டு  அந்த வீட்டுக்குச் சென்று வீட்டுக்காரரை அழைத்து அவர் வீட்டில் இல்லை எனத் தெரிந்திருந்தும் வீட்டில் உள்ள பெண்களிடம் நான் ஒரு சிக்கலில் மாட்டிவிட்டேன் (என்னை போக்குவரத்துப் பொலிஸார் பிடித்துவிட்டனர்) அவசரமாக ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது. உங்கள் கணவர் எனது மருமகனோடு வேலை செய்தவர். என்னை அவருக்கு நன்கு தெரியும் என்றவாறு பேசி பணத்தைப் பெற்றுச் செல்வதாகக் கூறப்படுகின்றது. இந்த ஏமாற்று வேலையைச் செய்வதற்காக பணம் வாங்கச் செல்லும் வீட்டுக்காரரின் முழு விபரங்களையும் இந்த ஏமாற்றுக்காரன் எப்படியோ அறிந்து கொண்டு செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சற்று கறுப்பு நிறமுடைய இவன் நீளக் கால்சட்டை அணிந்து கொண்டு வருவதாகவும் அடையாளம் கூறப்படுகின்றது

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top