ஐபிஎல் தொடரின் தொடக்க விழா
கோலாகலத் தொடக்கம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரின் தொடக்க
விழா, கொல்கத்தாவில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மழை
காரணமாக தொடக்கவிழா
தாமதமாகத் தொடங்கியது.
பாலிவுட் நடிகர்
சையஃப் அலி
கான் நிகழ்ச்சிகளைத்
தொகுத்து வழங்கினார்.
முதலில் மும்பை
அணியின் கேப்டன்
ரோஹித் சர்மாவும்
அவரைத் தொடர்ந்து
எட்டு அணிகளின்
கேப்டன்களும் மேடையில் தோன்றினர். நடப்பு சாம்பியனான
கொல்கத்தா அணியின்
கேப்டன் கெளதம்
கம்பீர் கோப்பையை
அறிமுகப்படுத்தி வைத்தார். பின், சென்னை சூப்பர்
கிங்ஸ் அணியின்
கேப்டன் தோனி,
அணிகளின் லோகோ
பொறிக்கப்பட்ட பேட்டில் கையெழுத்திட, அவரைத் தொடர்ந்து
மற்ற கேப்டன்களும்
அதில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து அனைவரும் கோப்பை முன் நின்று
புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதைத்
தொடர்ந்து வாணவேடிக்கைகள்
ஜொலிக்க, வண்ண
விளக்குகள் மிளிர, பாலிவுட் நடிகர் ஷாஹித்
கபூர், நடிகை
அனுஷ்கா சர்மாவின்
கலை நிகழ்ச்சிகள்
தொடங்கின.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.