இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு
கடத்திச் செல்லப்பட்ட 15 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி செல்லப்பட்ட 15 கிலோ தங்கத்தை  இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து தமிழகத்திற்கு தங்கம் கடத்திவரப்படுவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடியைச் சேந்த அதிகாரிகள் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பாப்பாநாடு பகுதியின் வழியாக வந்த ஒரு காரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த காரில் கடத்திவரப்பட்ட 15 கிலோ தங்கத்தை பொலிஸாஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு இந்திய ரூபா மதிப்பில்  4 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து காரில் வந்த இரண்டு பேரை  கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top