கவிஞர் அப்துல்
ரகுமான் ஒரு கருவூலம்
திமுக தலைவர் கருணாநிதி புகழாரம்
கவிஞர்
அப்துல்ரகுமான் ஒரு கருவூலம் என்றும், தமிழின்
முதன்மையான கவிஞர்களில் ஒருவர் என்றும் திமுக
தலைவர் கருணாநிதி
புகழாரம் சூட்டினார்.
அப்துல்
ரகுமானின் இரு
நாள் பவள
விழா சென்னை
காமராஜர் அரங்கில்
நடைபெற்று வந்தது.
அதன் நிறைவு
விழா நேற்று 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், "கவிக்கோ கருவூலம்' என்ற நூலை
கருணாநிதி வெளியிட,
திராவிடர் கழகத்
தலைவர் கி.வீரமணி பெற்றுக்
கொண்டார். விழாவில்
கருணாநிதி பேசியதாவது:
எனது இளம்பருவத்தில் வாணியம்பாடியில்
நடைபெற்ற கவியரங்கில்
அப்துல் ரகுமானோடு
எனக்கு நட்பு
ஏற்பட்டது. அன்று தொடங்கிய அப்துல் ரகுமான்
மீதான கவர்ச்சியும்
அன்பும், இன்றும்
எனக்குத் தொடர்கிறது.
அப்துல் ரகுமான்
ஒரு கருவூலம்.
அதைத் தெரிந்தே
கவிக்கோ கருவூலம்
என்று அழைப்பிதழ்
அச்சடிக்கப்பட்டுள்ளது.
கவியரங்கத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகளை நான் என்றும் மறக்கமாட்டேன். தமிழ் கவிஞர்களை வரிசைப்படுத்தினால், அதில் முதல் வரிசையில் அப்துல்ரகுமான் இடம்பெற்று இருப்பார். அப்படிப்பட்ட தமிழ் உணர்வாளர் அவர். நன்றி மறவாத நண்பராக இன்றும் விளங்கி வருகிறார். இவ்வாறு கருணாநிதி பேசியுள்ளார்.
அண்ணாவைப் பற்றி "விழுந்தாலும் விதைபோல விழுவார்' என்று ஒரு கவிதையில் கூறினார். அதை என்றைக்கும் என்னால் மறக்க முடியாது. தனக்குக் கிடைத்த புகழ் எல்லாம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று கருதியவர். தமிழ்ப் பற்றும், இனப்பற்றும் கொண்டவர். எல்லோருக்கும் புரியும் வகையில் கவிதை எழுதக்கூடிய அற்புதமான கவிஞர்.வைரமுத்து: எங்கள் எல்லோரையும்விட சிறந்த கவிஞர் அப்துல் ரகுமான். பகுதி நேர கவிஞர் இல்லை. கூட்டுப்புழு பட்டுப்புழு ஆவது போல முழு நேர கவிஞர். கவியரங்கின் பாதையே அவரால்தான் மாறியது. இங்கு இல்லாமல் வெளிநாட்டில் அவர் இருந்தால், உலக அளவில் புகழையும் விருதுகளைப் பெற்றிருப்பார்.
கவிக்கோ அப்துல்ரகுமானை நீண்ட காலமாக நான் அறிவேன். வாணியம்பாடியில் நடைபெற்ற ஒரு கவியரங்கத்துக்கு நான் அழைக்கப்பட்டு இருந்தேன். அவரும் அங்கு வந்திருந்தார். அன்று முதல் இன்று வரை, இனியும் நான் இருக்கும் வரை, அவரை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். அப்படிப்பட்ட கவிஞர் அப்துல்ரகுமான். அவரைப்பற்றி, நான் உங்களிடம் அதிகம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. நல்ல மனிதராக, பாசமுள்ள மனிதராக என்னிடம் பழகி வருகிறார்.
![]() |
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.