இரட்டை கோபுர தாக்குதலில் புஷ்ஷுக்கு தொடர்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப்
-ராய்ட்டர்ஸ்-

டோனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் மீது நடந்த தாக்குதலில் அப்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் டபள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
2016ல் நடக்க இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலில், முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷுக்கு தொடர்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனை விவரிக்குமாறு செய்தியாளர் கேட்டபோது, அப்போதைய ஜனாதிபதி அவர் தான். அதில் நிச்சயம் அவர் சம்மந்தப்பட்டுள்ளார் என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ள டொனால்ட் டிரம்புடன் அதேக் கட்சியைச் சேர்ந்த ஜெப் புஷ் (62) போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் தம்பியும், சீனியர் புஷ்ஷின் இரண்டாவது மகனுமாவார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top