தவறாக பாய்ந்த ஏவுகணை:
19 ஈரான் வீரர்கள் பலி
ஒமான் வளைகுடாவில், ஈரான் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்ட போது, ஏவுகணை தவறுதலாக தாக்கியதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் இ ஜஸ்க் பகுதியில் கடற்படை கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டன. அப்போது, ஒரு கப்பலில் இருந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டது. ஏவுகணை இருந்த இடத்திற்கும், இலக்கிற்கும் இடையே போதுமான இடைவெளி இல்லாததால் மற்றொரு கப்பல் மீது ஏவுகணை தாக்கியது. இதில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.