திருகோணமலை பிரதேசத்தில்
குடும்பத்தகராறு காரணமாக
தற்கொலைக்கு முயற்சித்த 60 வயது நபர்
திருகோணமலை
பிரதேசத்தில் தனக்கு தானே தீ மூட்டி
தற்கொலை செய்ய
முற்பட்ட வயோதிபர் திருகோணமலை
பொது வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம்
நேற்று
(30) பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு
தனக்கு தானே
தீ மூட்டி
தற்கொலை செய்ய
முற்பட்டவர் திருகோணமலை, இலிங்கநகரைச் சேர்ந்த, மாரிமுத்து
வேலாயுதப்பிள்ளை (60) என தெரியவருகின்றது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குடும்பத்தகராறு காரணமாக
கணவர் ஒரு
இடத்திலும் மனைவி அவரது உறவினர்
வீட்டிலும் வாழ்ந்து வந்த
நிலையில்
மனைவியை தாக்குவதற்காக சென்றபோது, தாக்க முடியாமல்
போயுள்ளது.
இந்நிலையில்
கோபம் கொண்ட
இவர், கையில்
எடுத்துச் சென்ற
மண்ணெண்ணையை தலையில் ஊற்றி தற்கொலை செய்ய
முயற்சி செய்து
காயமுற்ற நிலையில்
மீட்கப்பட்டு, 1990 அவசர அம்பியூலன்ஸ்
வண்டி மூலம்
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரியவருகின்றது.
குறித்த
வயோதிபர் தற்பொழுது
திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று
வருகின்ற நிலையில்
தற்கொலைக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.