அமெரிக்காவில் கொரோனா பலி
80 ஆயிரத்தை கடந்தது
அமெரிக்காவில்
கடந்த 24 மணிநேரத்தில்
கொரோனா தொற்று
காரணமாக 830 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அங்கு
கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 80,352
ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா
ஊரடங்கை தளர்த்துவதாக
சில மாகாணங்கள்
அறிவித்ததை தொடர்ந்து கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கலாமென
கவலை எழுந்தது.
இந்நிலையில் மார்ச் மாதத்தில் இருந்து நேற்று
முன்தினம் கொரோனா
தொற்றுக்கு ஒருநாளில் குறைந்தபட்சமாக
776 பேர் உயிரிழந்தனர்.
நேற்று
இரண்டாவது நாளாக
900க்கும் கீழ்
கொரோனா உயிரிழப்பு
பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 46 ஆயிரத்து 723 ஆக
அதிகரித்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.