இன்று முதல் ,மாத ஓய்வூதியம்
மற்றும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு
கொரோனா
பரவல் காரணமாக
பாதிக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஸவின் பணிப்புரையின்
பேரில் உரித்தாகும்
ரூபா ஐயாயிரம்
கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்கப்படும்.
மே
மாத கொடுப்பனவு
வழங்கும் பணிகள்
இன்று ஆரம்பமாவதுடன்,
வெசாக் பௌர்ணமி தினத்திற்கு
முன்னர் வழங்கி
முடிக்கப்படும்.
வயோதிபர்கள்,
அங்கவீனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளுக்காக மார்ச்
மாதம் முதல்
நபர் ஒருவருக்கு
ரூபா ஐயாயிரம்
வீதம் வழங்குவதற்கு
ஜனாதிபதி அவர்களினால்
தீர்மானிக்கப்பட்டது.
இக்குழுவினருக்கான
மூல ஆவணங்களில்
பெயர் குறிப்பிடப்பட்டவர்களைப்
போன்றே காத்திருப்பவர்
பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும்
கொடுப்பனவுகள் உரித்தாகும்.
மே
மாதத்திற்கான ஓய்வூதியம் வழங்குதல் நாளை ஆரம்பமாகி
பௌர்ணமி தினத்திற்கு
முன்னர் நிறைவுசெய்யப்படும்.
மொஹான்
சமரநாயக்க
பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி
ஊடகப் பிரிவு
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.