இந்தியாவின் முன்னாள்
பிரதமர்
மன்மோகன் சிங் மருத்துவமனையில்
திடீர் உடல்நலக் குறைவால், இந்தியாவின், முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், 87, டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த, காங்., மூத்த தலைவர், மன்மோகன் சிங், திடீர் உடல் நலக் குறைவால், நேற்று இரவு, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்குள்ள இருதய சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 'அவர் தற்போது கண்காணிப்பில் உள்ளார். சாதாரண வார்டில்தான் உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அல்ல' என, டாக்டர்கள் கூறியுள்ளனர்.
அசாமில் இருந்து, 1991ல் இருந்து, தொடர்ந்து, ஐந்து முறை, ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்தாண்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல பொருளாதார நிபுணரான அவர், ரிசர்வ் வங்கியின் கவர்னர், திட்டக் குழு துணைத் தலைவர், மத்திய நிதி அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
அவருக்கு, 2009ல், இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு பொருளாதார கொள்கைகளை அவர் தொடர்ந்து விமர்சித்து வந்தார். கடந்த வாரம் கூட, ஊரடங்குக்குப் பிறகான பொருளாதார நடவடிக்கைகள் குறித்து அவர் மத்திய அரசை கேள்வி எழுப்பியிருந்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.