பெண் அரச ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட
உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்!
பெண் அரச ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில்
கைதுசெய்யப்பட்ட தலைமை உத்தியோகத்தரை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு
சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்மாந்துறை நீதிமன்றத்தில் இன்று குறித்தநபரை
முன்னிலைப்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான பல சட்டத்தரணிகள் தமது தரப்பு
வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.
இருந்தபோதிலும் பிணைகோரிக்கை நீதிவானினால்
நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில்
வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.