மட்டக்களப்பு சிறைச்சாலையில்
சிறைக்கைதிகள் சிலர்
கூரை மேல் ஏறி போராட்டம்
மட்டக்களப்பு
சிறைச்சாலையில் சிறைக்கைதிகள் இன்று (05) கூரை மேல்
ஏறி போராட்டம்
மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று
முற்பகல் வேளைகளில்
சிறைச்சாலையின் கூரைக்கு மேல் ஏறிய 12க்கும்
மேற்பட்ட சிறைக்கைதிகள்
இந்த போராட்டத்தினை
மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைச்சாலையில்
இருந்த கைதியொருவர்
இன்று காலை
மரணமானதை தொடர்ந்து
குறித்த கைதியின்
மரணம் தொடர்பில்
நீதிபதி நேரடியாக
வந்து விசாரணைகளை
மேற்கொள்ள வலியுறுத்தியே
இந்த போராட்டம்
முன்னெடுக்கப்படுகின்றது.
காய்ச்சலினால்
சிறைச்சாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதியொருவர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள்
தெரிவித்தன.
எனினும்
குறித்த சிறைக்
கைதியின் மரணம்
தொடர்பில் சந்தேகம்
வெளியிட்டுள்ள சிறைக் கைதிகள் நீதிபதி அவர்கள்
நேரடியாக சிறைச்சாலைக்கு
வந்து விசாரணைகளை
முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
குறித்த
சிறைக் கைதிகளின்
போராட்டத்தினை தொடர்ந்து சிறைச்சாலையின் பாதுகாப்பு பலப்படுத்தப்
பட்டுள்ளதுடன் படையினரும் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.