ஹட்டனில் இரு பஸ்கள்
நேருக்கு நேர் மோதி விபத்து:
23 பேர் படுகாயம்
ஹட்டன், கண்டி பிரதான வீதியில் கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தியகல பகுதியில் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளன.
குறித்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 23 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸுமே நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவருகிறது.
காயமடைந்த 23 பேரில் 22 பேர் வட்டவளை வைத்தியசாலையிலும், ஒருவர் கினிகத்தேனை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதில் 11 பேர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதோடு, மேலும் 6 பேர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன..
ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ் வீதி விதிகளை மீறி பயணித்ததாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.