ஈராக் விமானப்படை தளம் மீது ராக்கெட் தாக்குதல்
அமெரிக்கா - ஈரான் இடையே
மீண்டும் போர் பதற்றம்
ஈராக்
விமானப்படை தளம் மீது, அமெரிக்க ராணுவத்தை
குறிவைத்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்கா - ஈரான் இடையே
போர் பதற்றம்
ஏற்பட்டுள்ளது.
ஈராக்
விமானப்படை தளம் மீது அமெரிக்க வீரர்களை
குறி வைத்து
ராக்கெட் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி
உள்ளது. அமெரிக்க
ராணுவத்தை குறி
வைத்து, 4 ராக்கெட்டுகள்
வீசி தாக்குதல்
நடத்தப்பட்டதாக ஏ.எப்.பி., நிறுவனம்
செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான்
ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை
அமெரிக்கா தாக்குதல்
நடத்தி கொன்றபின்,
இரு நாடுகளுக்கிடையே
போர் அபாயம்
இருந்தது. 'இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்'
என ஈரானும்
கூறியது. ஈராக்கும்
ஈரானுடன் கைகோர்க்க
பதற்றம் மேலும்
அதிகரித்தது.
இந்நிலையில்,
சில நாட்களாக
அமைதி திரும்பிய
நிலையில், அமெரிக்க
வீரர்களை குறிவைத்து
தாக்கியதால், அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும்
போர் பதற்றம்
உருவாகி உள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.