ஈரானில் உக்ரைன் விமானம் விபத்து :
180 பேரின் கதி என்ன?
ஈரானில்
180 பயணிகளுடன் சென்ற உக்ரைன் நாட்டு
விமானம் விழுந்து நொருங்கி, விபத்திற்குள்ளானது.
ஈரான்
தலைநகர் தெஹ்ரானில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த
737 போயிங் ரக விமானம், 180 பயணிகளுடன்
சென்றுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது
நேரத்தில், விமான நிலையம் அருகே
பயணிகள் விமானம் கீழே விழுந்து
நொங்கி, விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில்
பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
ஈரான்-
அமெரிக்கா இடையே போர் பதற்றம்
நிலவி வரும் நிலையில், உக்ரைன்
பயணிகள் விமானம் விபத்திற்குள்ளாகி உள்ளது.
இதனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம்
விபத்திற்குள்ளானதா அல்லது தாக்கப்பட்டதா என
விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்து பகுதியில் தொடர்ந்து
மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.