தபால் அதிபர் எம்.எம்.ஏ .முபாறக்கின்
சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி
சான்றிதழ் வழங்கி கெளரவிப்பு
சாய்ந்தமருது ஆஸ்பத்திரி வீதி, உப தபாலக தபால் அதிபர்
எம்.எம்.ஏ .முபாறக் அவர்களின் சேவையைப் பாராட்டி மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி
கெளரவித்துள்ளார்.
இலங்கை அஞசலின்
வருமான இலக்கை அடைந்த அக்கரைப்பற்று அஞசல்
அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட உப அஞ்சல் அதிபர்களைப் பாராட்டி கெளரவிக்கும்
நிகழ்வு நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று, அம்பாறை அஞசல் அத்தியட்சகர் எஸ் ஜெகன்
தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் திருமதி ஜெயானந்தி
திருச்செல்வம் தபால் அதிபர் எம்.எம்.ஏ .முபாறக் அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி சான்றிதழ் வழங்கி கெளரவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பிராந்திய நிர்வாக உத்தியோகத்தர் திருமதி
வி.கார்த்திகேசு உட்பட தபால் திணைக்கள உத்தியோகத்தகள் பலரும் கலந்து
கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.