அம்பாறை மாவட்ட செயலக மற்றும்
களஞ்சிய, அலுவலக கட்டடத்துக்கான
அடிக்கல் நாட்டும் வைபவம்
இன்றைய தினம் இடம்பெற்றது
அம்பாறை
மாவட்ட செயலகத்தில்
250 மில்லியனில் அமையவுள்ள களஞ்சிய மற்றும் அலுவலகத்துக்கான
புதிய கட்டடத்துக்கான
அடிக்கல் நாட்டும்
வைபவம் இன்றைய
தினம் செவ்வாய்க்கிழமை
(14.01.2020) காலை மாவட்ட அரசாங்க
அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில்
நடைபெற்றது.
அம்பாறை
மாவட்ட செயலகத்தின்
இடவசதியினை மேம்படுத்தும் வகையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 65 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில்
இக்கட்டடத்தின் முதல் கட்ட வேலைகள் மாவட்ட
செயலகத்தின் ஊடாக ஆரம்பிக்கப்படுகின்றன.
இக்
கட்டத்தின் மேற்ப்பார்வை நடவடிக்கைகளில்
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின்
பேராசிரியர் சமிந்த மானவடு தலைமையிலான ஆலோசனைக்குழுவினர்
ஈடுபடுகின்றனர். அண்ணளவாக 250 மில்லியனில் அமைக்கப்படவுள்ள இக்கட்டத்தின்
முதல் கட்ட
வேலைகளுக்காக 65 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள்
நடைபெறவுள்ளது
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.