குட்டைக்குள் பாய்ந்த பஸ் - 7 பேர் பரிதாப பலி
அசாம் மாநிலத்தில் சம்பவம்
அசாம்
மாநில தலைநகர்
கவுகாத்தியில் இருந்து சென்ற அரசு பஸ் நல்பாரி மாவட்டத்தில் இன்று குட்டைக்குள்
பாய்ந்த விபத்தில்
7 பேர் உயிரிழந்தனர்.
அசாம்
மாநில தலைநகர்
கவுகாத்தியில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் அம்மாநில
அரசுக்கு சொந்தமான
பஸ் பார்பேட்டா
நகரை நோக்கி
இன்று சென்று
கொண்டிருந்தது.மாலை 3.30 மணியளவில் நல்பாரி மாவட்டத்தின்
வழியாக சென்றபோது
அடபாரி என்னுமிடத்தில்
டிரைவரின் கட்டுப்பாட்டை
இழந்த பஸ் சாலையோரத்தில்
உள்ள குட்டைக்குள்
பாய்ந்தது.
இந்த
விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். குட்டைக்குள் மூழ்கிய
மேலும் சிலரை
மீட்கும் பணிகள்
தொடர்ந்து நடைபெற்றுவரும்
நிலையில் இந்த
விபத்தில் பலி
எண்ணிக்கை மேலும்
அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.



0 comments:
Post a Comment