கண்டி திகன கலவரத்தின் பிரதான சூத்திரதாரி
என அடையாளம் காணப்பட்டிருந்த
அமித் வீரசிங்க இன்று பிணையில் விடுதலை
.
கண்டி திகன கலவரத்தின் பிரதான சூத்திரதாரி என அடையாளம் காணப்பட்டிருந்த மஹாசொன் பலகாய வின் தலைவர் அமித் வீரசிங்கவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கண்டி நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் மார்ச் மாதம் கண்டி திகன பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கெதிரான இன வன்முறை தொடர்பில் அமித் வீரசிங்க பிரதான சூத்திரதாரியாக இனங்காணப்பட்டு கடந்த மார்ச் மாதம் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த வழக்கு விசாரணை தொடர்பில், கடந்த ஒக்டோபர் 18 ஆம் திகதி தெல்தெனிய நீதவான் ஷானக கலன்சூரிய முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அமித் வீரசிங்க உள்ளிட்ட 08 பேருக்கும் நவம்பர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.