தமது
பலத்தை நிரூபிக்கும் வகையில்
நாலா
பக்கத்திலும் இருந்தும்
கொழும்பிற்குள்
படையெடுக்கும் மக்கள்
தமது பலத்தை நிரூபிக்கும் வகையில் கொழும்பில் பாரிய
ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது.
குறித்த போராட்டம் இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில்
மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் இதில் கலந்து கொள்வதற்காக மக்கள் தயாராகி
கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் அலரி மாளிகையிலும் ஐ.தே.கவின் பெருந்திரளான
ஆதரவாளர்கள் திரண்டுள்ளதுடன், போராட்டத்தில் கலந்து கொள்வதற்கான தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்திற்காக கொழும்பு - கொள்ளுப்பிட்டியில்
அனைவரையும் ஒன்றிணையுமாறு பல்வேறு அழைப்புக்கள் ஐ.தே.கவின் ஆதரவாளர்களுக்கு
விடுக்கப்பட்டிருந்தன.
மேலும் போராட்டத்தில் அதிக எண்ணிக்கையானோர் கொழும்பில் ஒன்று
கூடுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.