இலங்கையில் ஐ.நா அமைதிப்படையை நிறுத்துமாறு
ரணில் விக்ரமசிங்கவின் போலி கையொப்பத்துடன்
போலியான கடிதம்
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த ஐ.நா அமைதிப்படையை நிறுத்துமாறு கோரி, வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கவின் போலியான கையொப்பத்துடன் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தக் கடிதம் முற்றிலும் போலியானது என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சிவில் உரிமையை நிலை நிறுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும், ஐ.நா அமைதிப்படையை நிறுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து அவசரமாக ஆராயுமாறு, அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், நோர்வே, ஜேர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் தூதரகங்களுக்கு இந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் பிரதிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.