சற்றுமுன் மஹிந்தவை நேரில் சென்று சந்தித்த சம்பந்தன்!
பேசிய விடயங்களும் வெளிவந்தன
எழுத்துமூலம் உறுதிமொழி தந்தால் மட்டுமே
உங்களுக்கு ஆதரவு



புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சற்றுமுன்னர் முக்கிய சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. மஹிந்தவின் விஜேராம இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பின் 16 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு மிகவும் அவசியம் என்று சம்பந்தனிடம் மஹிந்த தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த இரா. சம்பந்தன்,

கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என்று நீங்கள் எழுத்துமூலம் உறுதிமொழி தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பரிசீலித்து முடிவு எடுப்போம்என்றுபதிலளித்துவிட்டு வெளியேறி வந்துவிட்டார்.
இந்தச் சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸூம் கலந்துகொண்டார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top