ஐ.தே.கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள
 தடை உத்தரவு


ஐக்கிய தேசியக் கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தின் போது அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல், அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்படுதல் ஆகியவற்றிற்கு எதிராகவும் அரச வளங்களுக்குள் நுழைவதற்கு எதிராகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்ட பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்கு அமைய, கொழும்பு மேலதிக நீதவானால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளைத் தடுப்பதற்கு தேவையான அதிகபட்ச பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரால் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகஸ்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top